மாலையில் மலரும் காதல்!
பொதுவாகப் பூக்கள் எல்லாம் மாலையிலே மொட்டாகி இரவிலே முதிர்வடைந்து காலையிலே மலர்ந்து மணம் வீசுகின்றன.
ஆனால் இந்தக் காதல் என்ற மலரோ காலையிலே மொட்டாகி பகல் பொழுதிலே முதிர்வடைந்து மாலைப் பொழுதில் தான் மலர்ந்து துன்பப்படுத்துகின்றது.
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந்த நோய்.
(திருக்குறள் – பொழுது கண்டு இரங்கல் – பாடல் 1227)
இரா.சம்பந்தன்