|

தமிழ்ச் சேவல் நான்!

தமிழ்ச் சேவல் நான்!

மூடி மறைத்ததலை தாடி வளர்த்த முகம்

கோடி கருணைமிகு – இருகண்ணும்

நாடி வருமடியர் வலிமைபெற அசைந்து

நன்மை புரிந்துநிற்கும் – இருகையும்

வாடி நைந்துருகி நூல்கள் கிழிந்தறுந்த

வடிவில் அணிந்திருக்கும் – மேலாடை

கூடி நிலமசையக் குந்தி இருந்தெழுந்து

குறைகள் தீர்த்ததன்றி – வாணாளில்

சாடிச் சலமன்றி தனக்கென்றோர் பொருள்தேடாச்

சாது சீரடியின் – பாபாவை

பாடித் தமிமெழுதப் பரந்த கவிதைநெறி

பரிந்து எனக்களித்தாள் – தமிழன்னை

தேடிச் சொற்பொறுக்கி தீட்டும் கவிதையல்ல

தீயின் வெளிச்சமடா – என்கவிதை

ஓடி நடைபயிலும் ஓடை நதிவெள்ள

ஓசை இதுவென்று – தமிழ்சொல்ல

கூடி எதுகைகளும் மோனைத் தொடையுமென

கூவும் தமிழ்ச்சேவல் – நான்தானே!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.