சித்தர்கள் அறிந்த இரகசியம்!
சித்தர்களால் ஒரு மதில் சுவருக்குள் புகுந்து மறுபுறம் செல்ல முடியும் என்று சொன்னால் இன்றைய உலகம் சிரிக்கும். ஆனால் இதை எழுதி வைத்தவன் மடையனா என்றால் அதுவும் இல்லை. அவனும் சித்தன் தான். அப்போ எது உண்மையாக இருக்கும்?
மதிலில் இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத நுண் துளைகளினூடாக தமது உடலையும் பல நுண் அணுக்களாகப் பிரித்துச் செலுத்தி மறு புறத்தில் அவற்றை மீண்டும் ஒன்று சேர்த்து உடலாக்கிக் கொள்ளும் சித்தை அறிந்தவர்கள் சித்தர்கள்.
கடவுள் தேவதைகள் தொடங்கி மகான்கள் சித்தர்கள் வரை எல்லோருமே இந்த ஒரு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தான் ஒரு இடத்தில் இருந்து கொண்டு இன்னொரு இடத்தில் பிரசன்னமாகி காட்சி கொடுத்திருக்கின்றார்கள். இவ்வாறு தோன்றுவதற்கும் மறைவதற்கும் அவர்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவு கணப் பொழுதிலும் குறைவாக இருப்பதால் அதை அற்புதமாக நாம் காண்கின்றோம்.
எமது காலத்திலேயே குடைச் சுவாமிகள் காஞ்சிப் பெரியவர் வடலூர் வள்ளலார் ஷேசாத்திரி சுவாமிகள் போன்ற சித்தர்கள் இதைச் செய்து காட்டியிருக்கின்றார்கள்.
இன்றைய விஞ்ஞானத்தால் உடலைப் பல கூறுகளாக வேண்டுமானால் அறுத்துப் பிரிக்க முடியுமே ஒழிய அவற்றை ஒன்று கூட்டி உயிர்பெற்று எழுந்து நடக்க வைக்க எந்த மருத்துவரை வைத்தும் செய்து கொள்ள முடியாது.
இரா.சம்பந்தன்