புதுப் பணக்காரரின் இயல்பு!
புதுப் பணக்காரரின் இயல்பு!
சில மனிதர்களுக்குப் புதிதாகப் பணம் வந்து சேர்ந்துவிட்டால் அவர்கள் கடவுளை மதிக்கமாட்டார்கள். என்ன கதைக்கின்றோம் என்று யோசித்துக் கதைக்கமாட்டார்கள். சொந்தக்காரரையும் நண்பர்களையும் தேவையென்று கருதமாட்டார்கள். எதிலும் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பார்களே அல்லாமல் எதிரிக்கும் வலிமை இருக்கும் என்று எண்ணமாட்டார்கள்;. தாம் செய்யும் காரியங்களின் விளைவுகளையும் அவர்கள் சீர்தூக்கிப் பார்க்கமாட்டார்கள்.
செல்வம் வந்துற்ற போது தெய்வமும் சிறிது பேணார்
சொல்வதை அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும் பேணார்
வெல்வதே கருமம் அல்லால் வெம்பகை வலிதென்று எண்ணார்
வல்வினை விளைவும் பாரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர்.
(விவேக சிந்தாமணி பாடல் 51) இரா.ஞானசம்பந்தன்