Rasiah Gnana
ptroodnesS0110u9ua31mult4u78806ly58m 5mag96Mi3tatc4i21g8auth ·
Shared with Public
வார்த்தையின் வலிமை!
தமிழிலே எத்தனையோ நல்ல சொற்கள் இருக்கின்றன. இறைவனைப் புகழ்ந்து பாடவும் நல்ல வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் திருக்கேதீஸ்வரத்து இறைவனைப் பாடும் போது முதல் பாட்டிலேயே செத்தார் எலும்பு அணிவான் திருக்கேதீச்சரத்தானே என்று பாடினார் சுந்தரர்.
அவர் என்ன நினைத்துப் பாடினாரோ தெரியாது எதிர் காலத்தில் செத்தவர்கள் எலும்புகளை மாலையாக அணிய இருக்கின்றான் திருக்கேதீஸ்வரத்து இறைவன் என்று இப்பாடலுக்கு பொருள் கொண்டால் சுந்தரர் சொன்னது 2009 இல் உண்மையாகி கேதீஸ்வரத்து இறைவனுக்கு தமிழ் மக்களின் எலும்புகள் போதியளவு கிடைத்துவிட்டன.
நத்தார்படை ஞானன்பசு ஏறிந்நனை கவுள்வாய்
மத்தம்மத யானை உரி போர்த்தமண வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேற்
செத்தாரெலும் பணிவான்றிருக் கேதீச்சரத் தானே.
இரா.சம்பந்தன்