எங்கள் தமிழ்!
தமிழிலே உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 30 (12 உயிர் 18 மெய்)
ஆங்கிலத்திலே உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 26
ராமன் என்பதை RA – MA – N என்று ஆங்கிலத்தில் 5 எழுத்துகள் கொண்டு எழுதுகிறார்கள்
எங்கள் தமிழும் அப்படித்தான் 5 எழுத்துகள் கொண்டு எழுதுகிறோம் ர்ஆ – ம்அ – ன்
தமிழின் சிறப்பு என்ன என்றால் இந்த 5 எழுத்துக்களையும் உயிர்மெய் எழுத்துக்களைப் பாவித்து 3 ஆக நாம் குறைத்து ராமன் என்று எழுதி விடுகிறோம்.
குறைவான எழுத்துக்களைப் பயன்படுத்தி மொழியை இனிமையாக உச்சரித்துப் பேச எம் முன்னோர்கள் கண்டு பிடித்தது உயிர்மெய் எழுத்து.
இந்த உயிர்மெய் எழுத்து தமிழில் இல்லையானால் கடல் என்று எழுத மாட்டோம் க்அ ட்அ ல் என்றுதான் எழுதியிருப்போம்.
சோறு என்று எழுதியிருக்க மாட்டோம். ச்ஓ ற்உ என்று அழகில்லாமல் எழுதியிருப்போம்.( ச்ஓ -சோ ற்உ – று)
தமிழ் என்று இனிமையாக அழைத்திருக்கமாட்டோம் த்அ – ம்இ – ழ் என்று வேற்று மொழிகள் போலவே முறித்துப் பேசியிருப்போம்.
புத்தகங்களின் எழுத்துக்கள் அதிகமாகி பக்கங்களும் பெருந்தொகையாகப் போயிருக்கும்.
ஓலைச் சுவடிகளிலே எழுத்தாணி கொண்டு சுருக்கமாக எழுதி வைக்க அவர்கள் கண்டுபிடித்த உயிர்மெய் எழுத்து எங்கள் மொழியின் இனிமைக்கு பேருதவி புரிந்து வருகின்றது.