மனிதர்கள் உள்ளமும் தாமரைக் குளமும்!
ஒரு குளத்திலே அதனுடைய நீர் மட்டமானது எவ்வளவு உயர்ந்து செல்கின்றதோ அந்த உயரத்துக்கு ஏற்றால் போல அதில் இருக்கும் தாமரைக் கொடியின் தண்டும் உயர்ந்து வளர்ந்து அந்த நீர் மட்டத்துக்கு மேலே தனது பூவை மலரச் செய்யும்.
அது போல நான் உயர்நிலை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஒரு மனிதனின் உள்ளத்திலே எவ்வளவுக்கு நிறைந்து காணப்படுகின்றதோ அதற்கு ஏற்றால் போல அவனுடைய உயர்வும் வந்து அமைகின்றது.
வெள்ளத்து அனையது மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்து அனையது உயர்வு.
veLLath thanaiya malarnheettam maandhardham
uLLath thanaiyadhu uyarvu
( திருக்குறள் – அதிகாரம் ஊக்கம் உடமை – குறள் 595 )
தமிழ் மக்களே இந்த ஒரு குறளை மட்டும் சிறுவயதிலேயே உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். அது போதும். அவர்கள் உயர்வுக்கு!
With rising flood the rising lotus flower its stem unwinds;
இரா.சம்பந்தன்
The dignity of men is measured by their minds.