பகவான் ரமணர் வாழ்க்கையில்!
ரமணர் அப்போது நோய்வாய்ப் பட்டிருந்தார். அவர் கையிலிருந்த புண்களுக்கு பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது. அவர் படும் துன்பத்தைப் பார்த்த சகோதரி அலமேலு எத்தனையோ பேர் உனது ஆச்சிரமத்துக்கு வந்து உன்னால் நோய்கள் குணமாகிச் செல்கிறார்களே உனது நோய் குணமாக வேண்டும் என்று நீ வேண்டிக்கப்படாதா என்று கவலையோடு கேட்டார்கள்.
உடனே ரமணர் முதலிலே நான் எனக்கு ஒரு உடல் இருக்கின்றது என்று நினைக்க வேண்டும். அதிலே கை இருக்கின்றது என்ற நினைக்க வேண்டும் பிறகு அதிலே புண் இருக்கின்றது என்று நினைக்க வேண்டும். கட்டுப் போட்டிருக்கின்றார்கள் என்று நினைக்க வேண்டும். நோய் என்னை வேதனைப் படுத்துகின்றது என்று நினைக்க வேண்டும். இதன் பிறகு நோய் சரியாக வேண்டும் என்று நினைக்க வேண்டும்.
இத்தனையும் நினைக்க எனக்கு என்று ஒரு மனம் வேண்டுமே அலமேலு அந்த மனத்துக்கு நான் எங்கே போவேன் என்று கேட்டார்.