|

சமணர்கள் காட்டும் யாக்கை நிலையாமை

சமணர்கள் காட்டும் யாக்கை நிலையாமை

மனித உடம்பு தோலினால் செய்யப்பட்ட பை போன்றது. அந்தப் பைக்குள்ளே இருந்து கொண்டு உண்டு உறங்கி பல தொழில்களைச் செய்து கூத்தாடுகின்ற உயிரானது வெளியே புறப்பட்டுச் சென்றுவிட்டால் அந்த உடம்பாகிய பையை கயிற்றினால் கட்டித் தெருவழியே இழுத்துச் சென்றால் என்ன நீராட்டி மாலை மரியாதை செய்து அடக்கம் செய்தால் என்ன தெரு ஓரத்தில் போட்டுவிட்டுப் போனால் என்ன பலபேர் அதைக்கண்டு பழித்துப் பேசினால் என்ன எல்லாம் அந்த உடம்புக்கு ஒன்றுதான். எனவே உயிர் இருக்கும் போதே உயர்வு தாழ்வில் கவனமாக இருங்கள்.

நார்த்தொடுத்து ஈர்க்கிலென் நன்றாய்ந்து அடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.

(நாலடியார் – அறத்துப்பால் – யாக்கை நிலையாமை பாடல் 26)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.