|

தேவாரம் அடியெடுத்துக் கொடுத்த திரைப்படப்பாடல்! -1

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே

ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே

உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே

பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே

பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே

காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே

காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே

திருநாவுக்கரசர் தேவாரம்

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா

ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா

கவியரசு கண்ணதாசன்

(அவன்தான் மனிதன் படத்துக்கு எழுதியது)

தேவாரம் அடியெடுத்துக் கொடுத்த திரைப்படப்பாடல்! – 2

கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே

காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே

மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே

மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே

பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே

பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே

விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே

மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே

மாணிக்கவாசகர் திருவாசகம்

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ

கவியரசு கண்ணதாசன்

(மன்னாதி மன்னன் படத்துக்கு எழுதியது)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.