தலிபானும் அமெரிக்காவும்!
ஓய்வாக நிழலிலே கிடந்து
இரை மீட்கும் போதுதான் தெரிகிறது.
மேய்ந்த தரையும் கடித்த புல்லும்
தப்பானவை என்று!
சொந்க்காரன் விரட்டும் போதுதான்
புரிகிறது
தவறு செய்துவிட்டோமென்று!
மற்றவர்கள்
பேசிக்கொள்ளும் போதுதான்
உணர முடிகிறது
பயிருக்கும் புல்லுக்கும்
வித்தியாசம் உண்டென்பதை!
சரி
எங்களிடம் தான்
கொம்புகள் என்ற
ஆயுதம் இருக்கே
வரட்டும் பார்த்துக்கலாம்!
இந்த உலகத்திலே
தப்பு யாருடைய பக்கம்
என்பதல்ல பிரச்சனை!
ஆயுதம் யாரிடம் இருக்கு
என்பது தானே பிரச்சனை?
கொஞ்சம் வளரட்டும்
பிறகும்
மேய்ந்து கொள்ளலாம்!!
இரா.சம்பந்தன்