விவாகரத்தை ஆதரித்த ஒளவையார்!
பிழையான செய்யுளைப் படித்துக் கொண்டிருப்பதை விட எந்தவிதமான கருத்தும் இல்லாத இசையைக் கேட்டுவிட்டுப் போவது நல்லது. உயர்ந்த குலத்தில் பிறந்து ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காமல் வாழ்வதை விட தாழ்குலத்தில் பிறந்து மானத்தோடு வாழ்ந்துவிட்டுப் போவது நல்லது. நேர்மையில்லாத வீரத்தோடு இருப்பதை விட தீராத நோயோடு வாழ்ந்து செத்துப் போவது நல்லது.
அது போல மரியாதை தெரியாத மனைவியோடு வாழ்வதை விட தனியாகப் பிரிந்து போய்விடுதலே ஒருவனுக்கு நல்லது.
இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று-வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.