இரா. சம்பந்தன் கவிதைகள் 3
இரா. சம்பந்தன் கவிதைகள்
அன்பே!
எத்தகைய
பெருங் கூட்டத்திலும்
உன்னை நான்
இலகுவாகக்
கண்டு பிடிப்பேன்!
என்னைத்
திரும்பிப் பார்க்காமல்
போவது
நீ மட்டும் தானே!
இரா. சம்பந்தன் கவிதைகள்
மணம் முடித்த புதிதில்
உன்னைப் புத்தகம்
என்றேன் நான்!
அதனால் தான் இன்று
நூல் நிலையத்துக்குப்
போய்விட்டாயோ நீ!
இரா. சம்பந்தன் கவிதைகள்
என் பெயர் துப்பாக்கி!
சுட்டது நானாக இருந்தாலும்
பட்டது குண்டு தானே!
அப்படி இருக்கும் போது
போர்க் குற்றம் என்று
என்னையும் சேர்ப்பதா?
இரா. சம்பந்தன் கவிதைகள்
என்றும் மறக்க முடியாதவளே!
என்மனைவி அழுகின்றாள்
என் இதயத்தில் ஓட்டை என்று!
மருத்துவக் குறிப்புக்கு அந்த
ஓட்டை மட்டும்தான் தெரிகிறது!
அதுக்கு எப்படித் தெரியும் அது
நீ போன பாதையென்று?