காதல் செய்வீர்!
காதல் செய்வீர்!
கண்ணாலே காணப்பல பொருட்கள் உண்டு!
காதாலே கேட்பதற்கும் ஒலிகள் உண்டு!
மண்மீது வாய்சுவைக்கப் பொருட்கள் உண்டு!
மணப்பதற்கும் மூக்கிற்குப் பலதும்; உண்டு!
எண்ணாமல் மெய்தொடவும் நிறைய உண்டு!
என்றாலும் காதலெனும் ஒன்றே இந்தப்
பொன்னான வாழ்வியலில் ஐந்தும் தொட்டுப்
போற்றுதற்கு உள்ளபொருள்! காதல் செய்வீர்!
விண்ணாளும் தேவர்களும் குறத்தி யோடு
வேல்முருகன் செய்ததுவும் காதல் தானே!
பெண்ணாக ஆணாகப் பிறந்த நெஞ்சம்
பெறுமுறவும் காதலினால் அன்றோ! ஆமாம்!!