காடு நல்லது!
வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகையிலே நாட்டிலே வாழ்வதிலும் பார்க்க காட்டிலே வாழ்வது தான் இலகுவானது என்று அதிவீர ராம பாண்டியர் எழுதினார். உடனே ஒரு மாணவன் குருவே என்ன காடு நல்லது என்று எழுதி விட்டீர்கள்! காட்டிலே தானே சிங்கம் பலி கரடி யானை என்று கொடிய விலங்குகள் எல்லாம் இருக்கின்றனவே என்று தன் சந்தேகத்தை வெளியிட்டான்!
உடனே அதிவீர ராம பாண்டியர் மடையா! காட்டிலே கொடிய மிருகங்கள் இருந்தாலும் அவற்றுக்கு என்று இறைவன் தனித்தனியாக ஒவ்வொரு முக வடிவம் கொடுத்திருக்கின்றான். சிங்கம் இப்படி இருக்கும்! புலி என்றால் இப்படி இருக்கும் யானை என்றால் இப்படி இருக்கும் என்று முகத்தை வைத்து நீ அவற்றிடம் இருந்து முன் எச்சரிக்கையாக விலகி உன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்!
நாட்டிலே தான் எல்லோருக்கும் ஒரே முகத்தை இறைவன் கொடுத்து விட்டான். அதனால் தான் எது புலி எது சிங்கம் எது நாய் எது நரி என்று தெரியாமல் போய் மாட்டிக் கொண்டு துன்பப்பட வேண்டியிருக்கின்றது! என்று கூறினார்!