மனித உடல்களின் பெறுமதி என்ன?
மண்ணினாலே செய்த பானை விழுந்து உடைந்து விட்டால் சவர்க்காரம் போன்ற பொருட்களை வைக்க உதவும் என்று மனிதர்கள் உடைந்த துண்டுகளை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்வார்கள்.
வெங்கலப் பாத்திரம் விழுந்து உடைந்து போனால் அதையும் விற்றுக் காசாக்கிக் கொள்ளலாம் என்று நினைத்து அதையும் மனிதர்கள் எடுத்துப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வார்கள்.
இறைவனே நீ படைத்த எங்கள் உடலாகிய கொள்கலங்கள் உயிர் நீங்கிக் கவிழ்ந்து விட்டால் அதை வீட்டில் வைத்திருந்தால் நாறும் என்று நினைத்து தூர எடுத்துச் சென்று சுடலையிலே போட்டுவிடுவார்கள் இந்த மனிதர்கள்.
இப்படி எதுக்கும் உதவாத உடலை எங்களுக்கு படைத்துத் தந்து எங்களை நீ ஏமாற்றுவதற்கு காரணம் என்ன இறைவனே
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெங்கலம் கவிழ்ந்தபோது வேணும் என்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்தபோது நாறும் என்று போடுவார்
எண் கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசனே
(சிவவாகக்கியார் பாடல் )
இரா.சம்பந்தன்.