பஞ்சுப் பொதியும் – திராசுப் படியும்!

பஞ்சுப் பொதியும் – திராசுப் படியும்!

ஒரு கடலிலே பெரிய திமிங்கிலம் ஒன்று இருந்து கொண்டு மற்ற மீன்களை எல்லாம் விருப்பம் போல பிடித்து உண்டு வந்தது. ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்த ஒரு மீனுக்கு திமிங்கிலம் செய்யும் அடாவடியான காரியம் பிடிக்கவில்லை.

ஒரு நாள் நேரடியாகவே திமிங்கிலத்திடம் போய் இந்தக் கடலிலே வாழும் உரிமை எல்லோருக்கும் இருக்கின்றது. நீ நினைத்த நேரத்தில் எம்மைப் பிடித்து விழுங்குவது எந்த விதத்தில் நியாயம்? உனக்கு ஜனநாயகத்தை மதிக்கத் தெரியாதா ? என்று கோபமாகக் கேட்டது.

அதற்குத் திமிங்கிலம் அப்பனே! ஆத்திரப் படாதே!  எனக்கும் ஜன நாயகம் பற்றித் தெரியும்.  ஜனநாயக உலகில் எல்லோருக்கும் சம உரிமையும் உண்டு. அது தானே உனது எண்ணம்! அப்ப நீ ஒன்று செய். நீ என்னை விழுங்கி விடு என்றது.

திமிங்கிலத்தைப் பல முறை சுற்றி வந்த மீன் உன்னை என்னால் விழுங்க முடியாது என்றது. உடனே திமிங்கிலம் சிரித்து விட்டு தம்பி! நீயும் என்னை விழுங்க மாட்டேன் என்கிறாய். என்னையும் உன்னை விழுங்க விட மாட்டேன் என்கிறாய். நீதான் இப்போது ஜனநாயகத்துக்கு விரோதமாக நடக்கிறாய்.

ஐந்து கிலோ பஞ்சும் இருக்கு. ஐந்து கிலோ படியும் இருக்கு. இரண்டும் நிறையிலே ஐந்து கிலோ தான் என்றாலும்  எதனால் எறிந்தால் ஒருவரின்  தலை உடையும் என்பதை ஐனநாயகத்திலே பற்று வைத்திருக்கும் உன்னைப் போன்ற தம்பிமார் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். இங்கே தான் ஐன நாயக்தின் ஓட்டை இருக்கின்றது என்றது!

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.