யோகர் சுவாமிகள்!
அலைந்த வாழ்வும் அழிந்த வீடும்
அனந்த காலப் பயமென்றும்
குலைந்த மாந்தர் குவிந்த தேசம்
குனிந்த நீதித் தமிழீழம்
நிலைந்த தெய்வம் நினைந்த போது
நிலத்து வாழ்க்கையை விடுமேனும்
கலைந்த கேசம் கனிந்த தாடி
கலந்த தேகம் தடுமாறி
உலைந்த கால்கள் உறங்கு பாயில்
உணர்வை இழந்து தடுமாற
மலைந்த நோயும் மலமும் சலமும்
மறந்த நிட்டையை மனங்காட்டிச்
சிலைந்த வாழ்வு சிறக்கத் துன்பம்
சிறுக்கச் செய்த செயல்வீரர்
தொலைந்த முத்து தொடர்ந்த சொத்து
துவண்ட துண்டுத் தமிழ்யோகர்
புலைந்த ஜென்மம் புகைந்த தென்னப்
புகுந்த முத்தித் திருநாளும்
விளைந்த தின்று விரும்பி நின்று
விரைந்து கைகள் தொழுவோமே!