கந்தனும் மாடும்!
பலர்வீட்டில் தொழில்பார்த்துக் கந்தன் – அவன்
பலகாலம் சேர்த்ததோ ஆயிரம் ருபாய்
உலர்வேட்டி முடிச்சாகக் கட்டி – அதை
உயிராக காத்தாலும் ஒருநாளோ தெருவில்
அயர்வோடு நடந்திட்ட போதில் – அந்த
ஆயிரம் தொலைந்ததே வேட்டியும் அவிழ்ந்து
துயர்நெஞ்சில் அலைபாயக் கந்தன் – எங்கும்
தூங்காமல் தேடினான் உண்ணாமல் அலைந்து
தெருவிலே மாடொன்று நின்றே – தான்
தேடிய காசினை உண்பதைக் கண்டான்
அருகிலே சென்றவன் பார்த்தான் – ஐயோ
அருமந்த காசல்லோ ஆயிரம் ரூபாய்!
ஆத்திரம் கொளவில்லைக் கந்தன் – மாட்டின்
அருகிலே சென்றவன் அதனிடம் சொன்னான்
பாத்திரம் இல்லாத பிச்சை – நானும்
பணிசெய்து தேடிய ஆயிரம் ரூயாய்
தின்றனை அறிவிலா மாடே – அதிலே
தீட்டிய தவிடொடு வைக்கலும் வாங்கித்
கன்றொடு உண்ணலாம் பத்துநாள் – நீயோ
கடுதாசி ஆகவே ஒருநாளில் தின்றாய்!
நீயென்று தானில்லை மாடே – எம்மில்
நின்போல மாடுகள் பலவுண்டு கண்டாய்!
சீ!ஒன்று கிடைத்தாலே போதும் – அதன்
சிறப்பையும் தரத்தையும் கணப்போதில் அழிப்பார்!