மன்மதனின் மலர்க்கணையும் சாக்கியரின் கல்லெறியும்!
இறைவனைக் காம வசப்படுத்தி உமாதேவியோடு சேர வைப்பதன் மூலம் ஒரு குழந்தையைப் பெற்று அதைக் கொண்டு சூரனை அழித்து விடவேண்டும் என்ற தேவர்களின் குறுக்கு வழிக்கு துணை செய்ய இறைவன் மீது மலர் அம்புகளைத் தொடுத்தான் மன்மதன்! அவன் நோக்கத்தைப் புரிந்து கொண்ட இறைவன் நெற்றிக் கண் பார்வையாலேயே மன்மதனை எரித்துச் சாம்பலாக்கி விட்டான்!
இதே இறைவன் மீது பௌத்த துறவியான சாக்கிய நாயனார் தினமும் அன்போடு கல்லெறிந்து வழிபட்டார்! மென்மையான மலரால் தாக்கியவனை அழித்துவிட்டு திண்மையான கல்லால் நோகத் தாக்கியவரை அன்போடு ஏற்றுக் கொண்டான் இறைவன்!
தன் மேனியிலே தீய நினைவோடு வீழ்ந்த மலரை விட அன்போடு வீழ்ந்த கல் ஈசனுக்கு உவப்பாயிற்று அது போல குற்றமற்ற மனதுடையவர்களின் கடுமையான சொற்கள் இனிமையானவை! ஆனால் தீய நெஞ்சுடையார் இனிய சொற்களைப் பேசினாலும் அவை கொடிய தன்மையுடையனவாகும்!
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க – ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நன்நுதால்! ஒண்கருப்பு
வில்லோன் எறிமலலோ விருப்பு
(நன்னெறி – சிவப்பிரகாச சுவாமிகள்)