தசாவதாரமும் கூர்ப்புக் கொள்கையும்
தசாவதாரமும் கூர்ப்புக் கொள்கையும்
திருமாலை முதற்கடவுளாக் கொண்ட வைணவ சமயமானது பத்து அவதாரங்களைத் தம் இறைவனின் திருவிளையாடல்களாக எடுத்துக் கூறும். அவையாவன மச்ச அவதாரம் கூர்ம அவதாரம் வாரக அவதாரம் நரசிங்க அவதாரம் வாமண அவதாரம் பரசுராம அவதாரம் பலராம அவதாரம் கிரு~.ண அவதாரம் இராம அவதாரம் என்ற ஒன்பதுடன் கல்கி அவதாரம் என்ற இன்னும் நிகழாத அவதார தோற்றமும் இணைந்தது ஆகும்.
இந்த அவதாரங்களை உற்று நோக்கும் போது உலகின் கூர்ப்புக் கொள்கையான பரினாம வளர்ச்சித் தத்துவத்தின் சாயலைக் காணலாம். உலகின் முதல் உயிர் நீர் நிலையில் தோன்றி நீரிலும் நிலத்திலும் வாழும் நிலை அடைந்து பின்பு நிலத்தில் வாழும் உயிரினமாக மாறி பின் விலங்கும் மனித நிலையும் கலந்த நிலையை அடைந்து இதன் பின்பு மனிதன் என்று ஒத்துக் கொள்ள முடியாத ஒரு வித்திர உருவு நிலைக்கு வந்து அதன் பின்பே மனித நிலையை அடைந்திருக்கின்றது என்கிறார்கள் டார்வின் போன்ற விஞ்ஞானிகள்.
இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு தசாவதாரங்களை நோக்கினால் வியப்பு ஏற்படும். தசாவதாரத்தில் முதல் அவதாரம் மச்சம் எனப்படும் மீன். இது நீரில் தோன்றி நீரில் மட்டுமே வாழ்வது. அடுத்து கூர்ம அவதாரம் எனப்படும் ஆமை. இது நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது. இதனால் நீரில் தோன்றிய உயிர் நிலத்துக்கு தொடர்பாகிறது.
இதன்பின்பு நீருடன் தொடர்பில்லாத நிலத்தில் மட்டுமே வாழும் விலங்கான பன்றி வாரக அவதாரமாகின்றது. அதன்பின் விலங்கு ஆகிய சிங்கமும் நரனாகிய மனிதனும் கலந்த நரசிங்க அவதாரம் அமைகிறது. இது மனிதனிலும் சேராமல் முற்றாக விலங்கிலும் சேராத ஒரு அரைகுறை மாறுபாட்டோடு நின்றுவிடுகின்றது.
இதன் பின்பு குள்ள அல்லது குனிந்த மனித உருவம் வாமண அவதாரமாகக் காட்டப்படுகின்றது. இது மனித உருவம் போல தெரிகின்றது. ஆனால் குள்ள உருவமாக பூரண வளர்ச்சி அடையாத விசித்திர உருவாமாக காணப்படுகின்றது. அது மனித இனத்துக்கு ஒவ்வாத தருப்பையால் வண்டைக் குத்தும் இழிசெயல் செய்கிறது. அங்கே முழு மனிதனாத் தோற்றம் பெறும்; அடுத்த நிலை கொண்டுவரப்படுகிறது.
இதன் பின்பு பரசுராம அவதாரம் வருகின்றது. பரசுராமன் தோற்றத்தில் மனிதனாக இருந்தாலும் மன உணர்விலே சினம் மிக்க மிருக உணர்வோடு மன்னர்களை வேட்டையாடும் கொடூர பாத்திரம். இரத்தம் கொலை இவற்றோடு இருபத்தொரு தலைமுறையாக ஒன்றி நடந்த பாத்திரம். உருவம் மனிதனாகவும் குணம் விலங்கு நிலையிலும் இருந்த ஒரு தன்மையில் இருந்து விடுபட்ட நிலை அடுத்து வருகின்றது.
அதுவே துவாரகையில் கிரு~;ணனுக்கு அண்ணனாக பிறந்து வாழ்ந்த சுவடே தெரியாமல் சாந்தம் அன்பு நீதி போன்ற எண்ணங்களால் தெளிந்த நீரோடை போலத் திகழ்ந்த பலராமன் அவதாரம். இது முழுமை பெற்ற மனித நிலை.
முழுமையான மனிதநிலை அடைந்த பிறப்பில் இடையிடையே தெய்வத்தன்மை தலை தூக்கும் விதத்தில் கிரு~;ண அவதாரம் அமைகிறது. வெண்ணெய் திருடி உண்ணும் மனித இயல்புக்கு மத்தியில் கீதை உபதேசிக்கும் தெய்வத் திருவிளையாடல்! மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்குக்கு மாறும் உன்னத நிலை.
இதன் பின்பே இராம அவதாரம் வந்திருக்க வேண்டும். ஏனெனல் இராம அவதாரத்தில் மனிதத் தோற்றம் இருந்தாலும் மனிதச் செயற்பாடுகளை காண முடியவில்லை. எல்லாமே மனித சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்ட தெய்வ நடைமுறைகள். அங்கே மனித விருப்பு வெறுப்புகள் புலன் உணர்வுகளை அடக்கிய செய்திகள் சினத்தை அறவே நீக்கிய தெய்வ நிலை என்று மனிதப் பிறவியைக் கடந்த ஒரு தன்மை காணப்படுகிறது.
இதனை நோக்கும் போது வரப்போகும் கல்கி அவதாரம் என்பது மனிதச் சாயல் கொண்ட இராமனை விடவும் பெறுமதியான பூரண தெய்வத் தோற்றப்பாடாகவே இருக்கும் அதிலே மனித சாயல் துளியும் கலந்து இருக்கப் போவதில்லை என்று அறுதியிட்டுக் கூறலாம்.
எனவே கல்கி என்றும் பகவான் என்றும் மானுடர்கள் தங்களை கூறிக் கொண்டு மடம் அமைத்து வாழ முடியுமே ஒழிய அந்தப் பரம் பொருளின் நிழலைக் கூட அவர்களால் மிதிக்க முடியாது என்பதே உண்மையாகும்.
இதிலே இராம அவதாரமும் கிரு~;ண அவதாரமும் மாறுபட்டு இருந்தாலும் பலராமன் வரையாவது மனித இன வளர்ச்சிக் கொள்கையோடு இந்த அவதார வைப்புகள் இணங்கி வருவதைக் காணலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சிந்தனையும் சித்தரிப்பும் இது என்பதே தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்! இக் கட்டுரை சிலம்பொலி செல்லப்பனின் கருத்து ஒன்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.