இரா.சம்பந்தன் கவிதைகள்! -5
இரா.சம்பந்தன் கவிதைகள்! -5
எனக்கு உடன்பாடில்லை!
உளிகள் தாக்கிய பின்புதான்
சிலையென்னும்
புகழ் கிடைக்குமானால்
நான் கல்லாகவே
இருந்துவிட்டுப் போகிறேன்
புகழுக்காகக் காயப்படுவதில்
எனக்கு உடன்பாடில்லை!
இலங்கை நாடு!
வால்மீது தீயிட்டுக் குரங்கினால் தன்
வடிவான மாளிகையைக் கொழுத்திக் கொண்ட
வேல்வீரன் இராவணின் கூட்டம் ஆண்ட
வரலாற்றைக் கொண்டதெங்கள் இலங்கை நாடு!
– இரா. சம்பந்தன்