மெட்டுக்கு பாட்டு எழுதிய எமது முன்னோர்கள்!
முன்பெல்லாம் நாங்கள் பாட்டை எழுதினோம். அதற்கு இசையமைத்தார்கள். இப்போது மெட்டை தந்து அதற்கு பாட்டு எழுதும்படி கேட்கின்றார்கள் என்று திரைத்துறைக் கவிஞர்கள் புலம்பி வருகின்றார்கள்.
இது தவறு. இது இப்போது தான் தோற்றம் பெற்ற கலாச்சாரம் அல்ல. கலிங்கத்துப் பரணியில் சயங்கொண்டான் பறை ஓசையின் தாளத்துக்கு பாட்டு எழுதியிருக்கின்றான்.
பறை இசை இரு மேளங்களால் ஒலிக்கப்படுகின்றது. தோளிலே இடது பக்கமாக தொங்கும் மேள ஒலி இது
டண்டண் டண்டண் டண்டண் டண்டண்
டண்டண் டண்டண் டண்டண் டண்டண் – டண்
நெஞ்சிலே அரை வட்ட வடிவான மேளத்தை தொங்கச் செய்து இரு கைகளாலும் வளைந்த கோல் கொண்டு இடைவிடாது அடித்து எழுப்பப்படும் ஓசை இது
டங்குடு டங்குடு டங்குடு டங்குடு
டங்குடு டங்குடு டங்குடு டங்குடு – டங்குடண்
இந்த இரு தாள ஓசைகளையும் பின்வரும் கலிங்கத்துப் பரணிப் பாடல்களைச் சொல்லிப் பாருங்கள் அவற்றிலே காணலாம்.
பொரிந்த காரை கரிந்த சூரை
புகைந்த வீரை எரிந்த வேய்
உரிந்த பாரை எறிந்த பாலை
உலர்ந்த ஓமை கலந்த வே.
உதிர்ந்த வெள்ளி உணங்கு நெல்லி
ஒடுங்கு துள்ளி உலர்ந்த வேல்
பிதிர்ந்த முள்ளி சிதைந்த வள்ள
பிளந்த கள்ளிப ரந்தவே.
வற்றல் வாகை வறந்த கூகை
மடிந்த தேறு பொடிந்த வேல்
முற்றல் ஈகை முளிந்த விண்டு
முரிந்த புன்கு நிரைந்தவே.