பொழுதொன்று விடியட்டும் !
சிறுகதை
மணி பதினொன்று ஆகிவிட்டது. கடிதங்கள் வந்திருக்கும். மனோகரி இறங்கி நடந்தாள். மூச்சு வாங்கியது. காசுத் தேவையால் ஒன்பது மாதமாக வயிற்றில் இருக்கும் குழந்தைகூட பாரமாகத் தெரியவில்லை அவளுக்கு.
இன்றைக்கும் வெல்பெயர் வராவிட்டால்? நினைக்கவே தலை சுற்றியது. காலையில் வெறும் ஜாம் போத்தலில் பிள்ளைகள் பாணைத் தொட்டுச் சாப்பிட்டது இப்பவும் அவளை என்னவோ செய்துகொண்டிருக்கிது.
கடைக்கும் போக வேண்டும்தான். அதுக்கு முன்னர் நாளைக்கு வாடகை போட என்ன செய்கிறது. டெலிபோன் காசுக்கு என்ன செய்கிறது. காரையும் தூக்கப் போவதாக கடிதம் வந்து ஒரு மாதம் இருக்கும். எல்லாப் பிரச்சனையையும் என்ன செய்கிறது.
திரும்பவும் திலக்கிடம் தான் கேட்க வேண்டிவருமோ? அவனுடன் தொடர்பு ஒன்றும் வேண்டாம் என்று இருக்கின்ற எனக்கு திரும்பவும் அதுதான் விதியா? கடவுளே! படியை விட்டு இறங்கி சமநிலத்துக்கு வந்ததும் சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றாள். நடக்க முடியவில்லை. மனதிலை வலு இருந்தால்தானே காலிலை அது வாறதுக்கு. இனி கடிதம் பார்த்துக்கொண்டுஇ மூன்று மாடி ஏறித்தான் போக வேண்டும்.
என்ன மனோ கடிதம் பார்க்கவோ?
கடிதங்கள் எடுத்துக் கொண்டு வரும் வாசுகியைக் கண்டபோது அவமானம் பிடுங்கித் தின்றது. அவளிடம் உடனே தருவதாகச் சொல்லி வாங்கிய இருபது டொலரும் இன்னமும் கொடுக்கவில்லை.
இன்றைக்கு புதனோடு புதன் எட்டுஇ வியாழன் ஒன்பது நாள். வசதி இல்லாததால் இன்னமும் கொடுக்கவில்லை. அந்தப் பயத்திலை அவளின் வீட்டுக்குப் போவதும்இ ஏதாவது படக் கொப்பி வாங்கி வந்து பார்ப்பதும் என்றிருந்த ஆகக் கூடிய சந்தோசமும் இப்ப கொஞ்ச நாளாக இல்லை.
வாசுகிக்கு ஓம் என்று தலையாட்டிவிட்டு நழுவிய அவளைஇ என்னப்பா வரவர வயிறு பெரிசாய் கிடக்குதுஇ இதுவும் ஆம்பிளை பிள்ளையாக்கும் என்ற வாசுகியின் கேள்வி தடுத்து நிறுத்தியது. மனோகரி சிரித்தாள். அதுதான் அவளால் செய்ய முடிந்தது. சிரித்தாள்.
மனுசன் எப்ப வருவாராம்? இப்ப சிங்கப்பூரிலை இருந்து வாறதும் கஸ்டமாம். போயும் ஏழு மாதம் இருக்கும் என்ன? ஆட்களைத்தான் கொண்டு வராவிட்டாலும் அவராவது வந்தால்தானே உமக்கும் உதவியாய் இருக்கும். இல்லாட்டில் இரண்டு பிள்ளைகளோடை மூன்றாவதையும் பெத்து வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமாட்டீரப்பா.
அடுப்பில கறி மனோ. நான் கதைச்சுக்கொண்டு நின்றால் அப்படியே நின்றிடுவான். நீர் ஆறுதலை பார்த்துக் கொண்டு வாரும். படிகள் கவனமப்பா. தடக்குப்பட்டு நாசங்கட்டிப் போடாதையும். இப்படிச் சொல்லிக்கொண்டே போனாள் வாசுகி.
நியாயமான கருத்துத்தான். பிள்ளை வயிற்றோட தெருவில தன்னை இரண்டு பிள்ளைகளும் போட்டுப் படுத்தும்பாடு அவளுக்குத் தெரியும். அதுகளை சொல்லியும் குற்றமில்லை. விளையாட்டு வயசு. வெய்யில் நேரத்திலையாவது அதுகளை கீழை கூட்டிக்கொண்டுபோய் நாலு பிள்ளைகளோடை விளையாட விடவேணும். ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுக்கவேண்டும்.
ஆனால் யார் செய்யிறது.? தனக்கு ஒரு பெண்சாதி இருக்குதுஇ இரண்டு பிள்ளைகள் இருக்குதுகள்இ பத்தாததற்கு இன்னொன்றும் பிறக்கப் போகுது என்று மனுசனெல்லோ யோசிக்கவேண்டும்.
எத்தனை நாள் டெலிபோனிலை சொல்லி அழுதாச்சு. உங்களுக்கு இந்த ஆட்களை கூட்டிக்கொண்டு வாற வேலை வேண்டாம். கொஞ்சக் காசென்றாலும் இங்கை வேலை செய்து கொண்டு நிம்மதியாய் எனக்குப் பக்கத்தில இருங்கோ.
உங்களை விட்டுப்போட்டு உயிரை கையிலை பிடிச்சுக் கொண்டு கலங்க என்னாலை ஏலாது. அதுபோதாதென்று அதுகளின்ரை புத்தகத்தையும் கொண்டு போட்டியள். நாளைக்கு அந்த இரண்டு பிள்ளைகளுக்கும் ஏதாவது ஒன்டென்றால் என்ன செய்யிறது?
வெல்பெயர் எடுத்து டெலிபோனுக்கு கட்டினதுதான் மிச்சம். நான் திலக்கிட்டே எல்லாம் சொல்லிப்போட்டுத்துத்தானே வந்தனான். அவனிட்டைக் கேளுமப்பா. அவன் எல்லாம் செய்வான். எல்லா வேதனைக்கும் மனுசன் ஒரு வரியிலை பதில் சொல்லிப் போடும்.
திலக் யார்? உங்களுடைய தம்பியா? என்னுடைய சகோதரமா? நீங்களும் அவனும் ஒன்றாக வேலை செய்த சிநேகிதத்தால் ஏற்பட்ட பழக்கத்தை வைச்சுக்கொண்டு என்னுடைய எல்லாப் பிரச்சனைகளையும் அவனுக்குச் சொல்லிக்கொண்டு இருக்கேலாது.
இப்ப பிள்ளை வயித்துக்கை துடிக்குதப்பா. இடது பக்க அடி வயிற்றிலை தலையாலை இடிக்கிற மாதிரி கிடக்குது. காலுக்கை பிடிக்குது. நெஞ்செரிக்குது. நெடுகிலும் பசிக்குது. நல்ல சாப்பாடு சாப்பிட வேணும் போல இருக்குது.
இதையெல்லாம் போய் அவனுக்கு சொல்ல சொல்லுறியளா? என்னப்பா உங்களின்ரை கதை? மூன்று பஸ் எடுத்து டாக்டரிட்டை போகிறன். யோசித்துப் பாருங்கோ. எத்தனை நாள் கெஞ்சியாகி விட்டது. மனுசன் வந்தால் தானே!
எப்ப பார்த்தாலும் திலப்கோடை போ என்றபடிதான். அவனுடைய கூத்துக்கள் இந்த மனுசனுக்குத் தெரியாது. எத்தனையோ தரம் சொல்ல நினைச்சுப்போட்டும்இ அதுகளை சொல்ல பிறகு மனுசன் எனக்கும் அவனுக்குமிடையில் என்னவோ இருக்காக்கும் என்று மற்ற வளத்தாலை வரப்பார்க்கும். முந்தி திலக் அப்படியில்லை.
இப்பதான் அவனின் கதைகள் காரியங்கள் ஒரு மாதிரியாய் படுகிது. எதோ சகோதரம் மாதிரி பழகுது என்று வீட்டிலை நிக்கிற உடுப்போடு போய் அது வந்து தட்டினால் கதவை திறக்கிறது. ஒருவேளை நான் எதுக்கோ அலையிறன் என்று பொடியன் நினைச்சு கொண்டுதாக்கும். அதுவும் என்னிலை பிழைதான்.
அதுக்காக அப்பிடி இப்பிடி புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வந்து எனக்கு தரச் சொல்லி இருக்கோ. நானும் ஏதோ குமுதம்இ பொம்மை மாதிரித் தானாக்கும் என்று வாங்கி வைச்சிட்டன்.
அன்றைக்கு அவன் நிற்கேக்கை என்ன புத்தகம் என்று தெரியாமல் போட்டுது. அண்டைக்கு நினைச்சனான் இவனை இனிமேல் பத்து மீட்டர் தூரத்தில வைச்சிருக்க வேணுமெண்டு.
எப்ப பார்த்தாலும் அப்பிடி இப்பிடி கதைகள். பார்வைகள். இப்ப என்னாலை ஏலக்கூடியவரை குறைச்சாச்சு. கஸ்டத்திலை கொஞ்சம் காசைத்தான் மாறிப் போட்டன். அதைச் சாட்டித்தான் இப்ப டெலிபோன் எடுக்கிறவன். அதையும் கொடுத்து தொலைச்சுவிடவேணும் என்று நினைக்க இந்த வெல்பெயர் தலையிடியை கொடுக்குது.
வெல்பெயர் வராவிட்டால் அவனிட்டைத் தானே கேட்க வேண்டும். கேட்டால் திரும்பவும் தொல்லைதான். மூன்று மாதமாக அவனின்ரை காரிலை ஏறாமல் பஸ்ஸிலை அலைஞ்சு திரிஞ்சது எல்லாம் வீணாகத்தானே போகப்போகுது.
எதோ நடக்கிறது நடக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு தபால் பெட்டியை திறந்தாள். குப்பைபோல விளம்பர பேப்பர்கள். வெல்பெயர் வரவில்லை. விசா காட் கடிதம் கிடந்தது. என்ன செய்யிறது. அழுகை வந்தது.
இருபத்து நான்கு வயதிலே கல்யாணம் முடிந்தது. இன்று முப்பத்தியொரு வயது. அம்மா அப்பாவோடு இருந்த நாள் வரை ஒருநாள் கூட காசுக்கு கஸ்டப்பட்டது கிடையாது. வீட்டிலை கடைசிப்பிள்ளை என்று எல்லாருக்கும் செல்லம். அண்ணாக்கள் அக்காக்கள் என்று எல்லாருமே நல்லாய்த்தான் இருக்கினம்.
மூத்தக்கா ஆஸ்திரேலியாவில். சின்னண்ணா லண்டனில். அவர்களுக்கெல்லாம் தெரியாது இந்தப் பிரச்சனை. எப்ப டெலிபோன் எடுத்தாலும் என்னடி சந்தோசம் இல்லாமல் கதைக்கிறாய் என்றுதான் முதலில் கேட்பான் சின்னண்ணா. படுத்திருந்தனான் அதுதான் ஒருமாதிரி குரல் இருக்குது என்று சொல்லி சமாளித்தாலும் நம்பாமல் ஏதோ சொல்லு என்பான்.
ஐயா அம்மாவுக்கு என்னுடைய நிலைமை தெரிந்தால் அதுகள் உயிரை விட்டிடுங்கள். தான் தானே முன்னுக்கு நின்று செய்து வைத்தது என்று ஐயா சாப்பிடவும் மாட்டார். படிக்கிறவளுக்கு இப்ப என்ன கல்யாணம் என்று மாமா அப்பவே சத்தம் போட்டவர். இதையும் கேள்விப்பட்டால் இருந்த பாடில்லை.
எல்லாவற்றையும் யோசித்துதான் ஒருவருக்கும் வாய் திறப்பதில்லை அவள். இரண்டு மாதத்துக்கு முன்னர்கூட மனுசன் வந்திட்டு உடனே போயிட்டுது என்றுதான் பொய் சொல்லியிருந்தாள். மாதக் கணக்கிலை மனுசன் வராமல் நிற்குது என்று அறிஞ்சால் இவர் என்னிலை அக்கறை இல்லை என்று நினைப்பினம் என்ற பயம் அவளுக்கு.
இந்த மனுசனை எத்தனை பேருக்கு பிடி கொடுக்காமல் நான் பார்த்துக்கொண்டு வாறன். இந்த திலக் ஆட்களிடம் ஐம்பது நூறுக்கு கையேந்தாமல் சின்னண்ணாவிடம் ஒரு சொல்லு சொன்னால் போதும்இ மாசம் மாசம் காசு வந்துகொண்டே இருக்கும். அப்பிடி கேட்டால் பிறகு இந்த மனுசனுக்கு ஐந்து சதத்துக்கும் மதிப்பு இராது.
பெரியத்தான்இ சின்னத்தான் மாதிரி இந்த மனுசனும் கௌரவத்தோடு இருக்க வேணும் என்று நினைச்சுத்தானே எல்லாக் கஸ்டத்தையும் நானே அனுபவிக்கிறன். இதையெல்லாம் இந்த மனுசன் யோசிக்குதே. ஏதோ நடத்தி முடிக்கட்டும். திரும்பி நடந்தாள்.
ஹலோஇ நான் மனோகரி கதைக்கிறேன். திலக் நிற்கிறாரா?
பொறுங்கோ அக்காஇ நான் கூப்பிடுறன்இ திலக் ! ஏய் திலக்இ உன்ரை ஆள் கதைக்கிறாஇ வாடா
மடையா. டெலிபோனிலை கத்திறாய்இ அவவுக்கு கேக்கவெல்லேபோகுது.
நான் டெலிபோனை பொத்திக்கொண்டுதான் சொன்னனான். நீ பயப்படாதைஇ கேட்டாலும் என்னஇ உண்மைதானே!
தேகமெல்லாம் குளிர்ந்து நடுங்கியது. மனோகரிக்கு. என்ன செய்வதென்று தெரியவில்லை. உயிர் போனாலும் இனி இவனிட்டை காசு கேட்கக்கூடாது என்று நினைத்தவள்இ எதையும் காட்டிக் கொள்ளாமல் ‘கன நாள் எடுக்கவில்லைத்தானே – அதுதான் சும்மா எடுத்தனான்’ என்று சொல்லிவிட்டு வைத்து விட்டாள்.
சின்ன வயதிலே இருந்து படித்ததுஇ கல்யாணம் கட்டினது எல்லாமே சின்னண்ணாவின் காசுதான். கனடா மாப்பிள்ளை- அதுவும் அங்கை உத்தியோகம் என்றதும் நல்ல சம்பந்தம் விட்டிடாமல் செய்யுங்கோ என்று லண்டனிலிருந்து கடிதங்களும் காசுமாக அவன் அனுப்பியபடியால்தான் இந்தக் கல்யாணம் கன்றாவிகள் எல்லாம்.
இனியும் அவனிடம் கையேந்த வேண்டுமென்று விதியிருந்தால் யாராலும் மாற்ற முடியாது. பால் சட்டிக்குப் பக்கத்திலை நிக்கிற பூனை போன்ற இந்தப் பொடியளிட்டை கைநீட்டிறதை விட அண்ணாவிடம் நீட்டிறது எவ்வளவோ மேல். உன்னுடைய அண்ணாதானே. அவளை அறியாமலே கைகள் எண்களை சுழற்றின.
ஹலோ நான் மனோகரி கதைக்கிறேன்.
என்ன மனோஇ கொஞ்ச நாளாய் டெலிபோனும் இல்லைஇ ஆளும் இல்லை. இஞ்சை இவரும் நானும் பயந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் இவர் வேலையாலை வந்ததும் அவள் எடுத்தவளோ என்று கேட்கிறதும்இ உமக்கு டெலிபோன் அடிச்சுப் பார்க்கிறதும்இ பிறகு யோசித்துக் கொண்டிருக்கிறதும்தான் வேலை. கடைசியாகஇ வேலைக்கு லீவு போட்டுவிட்டு உம்மைப் பார்க்க வரப்போறன் என்றார்.
நான் பேசினேன். மனோகரி எங்கையாவது போயிருக்கும் அப்பாஇ அப்பிடி ஏதேனும் பிரச்சினை என்றால் ஜெகனாவது டெலிபோன் அடிச்சிருக்கும் என்று சொன்னன். அண்ணை வந்தாப் பிறகு ஏச்சைப் பாரும்.
அண்ணி தனக்கே உரிய கலகலப்போடும் சிரிப்போடும் கதைத்துக்கொண்டே போனாள்.
அண்ணிஇ நான் அண்ணாவிட்டை ஒரு விசயம் கேட்க வேணும்.
மனோகரி! நீர் என்ன கேட்கப் போகிறீர் என்று எனக்குத் தெரியும். என்னிலை குறை நினைக்கதையும். உம்மடை அண்ணாதான் ஜெகனுக்கு ஆயிரத்துநூறு பவுண்ஸ் அனுப்பியவர்.
எதோ அவசர தேவை என்று ஜெகன் கேட்டவராம். மனோகரி அறிஞ்சால் பேசுவாள் என்று இவருக்கு நான் சொன்னனான். கேட்டால் தானே! அந்தக் கோபத்திலைதான் நீர் டெலிபோன் எடுக்காமல் இருக்கிறீர் என்றுதான் நான் நினைச்சன்.
என்ரை இவர் அண்ணாட்டை காசு வாங்கினவரோ? ஏக்கத்தோடு கேட்டாள் மனோகரி.
ஏன் வாங்கப்படாதோ? சிங்கப்பூரிலை அதுக்கு என்ன காசிடமோ. எதோ உம்மடை மனுசன் பிறத்தியாரிட்டை கேட்டதுபோல எல்லோ ஏங்கிறீர். ஒன்றுக்குள் ஒன்று அவசரத்துக்கு மாறிறதுதான் என்று உரிமையோடு சொன்னாள் அண்ணி.
இல்லை அண்ணிஇ இங்கையும் பாங்கிலை காசிருக்குது. எடுத்து அனுப்ப சொல்லிக் கேட்டவர். அனுப்பினால் இப்போதைக்கு வரமாட்டார் என்றுதான் அனுப்ப மாட்டேன்இ வாங்கோ என்று சொன்னனான். அதுதான் என்னோடு கோபித்துக் கொண்டு அவர் அண்ணாவிட்டை வாங்கியிருக்கிறார்இ வரட்டும்.
ஐயோ மனோகரிஇ இதெல்லாம் நான் சொன்னது என்று சொல்லிப் போடாதையும். பிறகு அண்ணாவோடை இருந்தபாடில்லை.
சரி அண்ணி நான் ஆறுதலாக எடுத்துக் கதைக்கிறேன் என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு நிமிர்ந்தாள் மனோகரி. நினைக்கவே ஆத்திரமாக இருந்தது.
எந்த மனுசனின் கௌரவத்துக்காக நான் இவ்வளவு கஸ்டங்களையும் அனுபவித்தேனோ அந்த மனுசன் அவர்களிட்டை கையேந்திப்போட்டு நிற்குது. இந்த மனுசன் எப்ப வரப்போகுது. எப்ப இந்த காசைக் கொடுக்கப்போகுது.
கடவுளே வாங்கினதுதான் வாங்கிச்சு – தன்னுடைய ஆக்களிட்டை வாங்கி இருக்கலாமே. பொதுவாகவே இந்த ஆம்பிளையள் இப்பிடித்தான். மனுசியின்ரை ஆக்களிட்டை கடன் வாங்க வெட்கமில்லை. மனுசிமாருக்கும் மானம் ரோசம் இருக்குது என்பதை மறந்து விடுகிறார்கள். பெருமூச்சு விட்டாள் மனோகரி.
இனி இந்த மனுசனோட கதைச்சு வேலையில்லை. எப்பிடியும் அந்த பவுண்ஸ் எல்லாத்தையும் முடிச்சுப் போட்டுத்தான் வரும். இல்லாட்டி ஆஸ்திரேலியாவுக்கும் டெலிபோன் பண்ணி பெரியக்காவிட்டையும் காசு கேட்குதோ தெரியாது. எப்பிடியும் இந்த காசுக் கதை லண்டனிலிருந்து சிலோனுக்குப் போய் அங்கையிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் போகத்தான் போகுது. போகட்டும். வாய் விட்டு அழுதாள் அவள். இப்ப அவள் மனதில் ஒரு வைராக்கியம்.
நாளைக்கு வாசுகியிடம் ஒரு நாலு டொலர் வாங்கி வெல்பெயர் அலுவலகத்துக்கு போய் கேட்டுப் பார்ப்பம். முந்தி வேலை செய்தனான். இந்த மனுசன் ஏஜென்சி வேலைக்கு ஆசைப்பட்டு வேலையை விட்டபடியால் தானே ஆறு மாதத்தில பிள்ளையளின்ரை டேகெயர் நிற்பாட்டினவங்கள். பிள்ளையளை விட இடமில்லாதாலைதானே நானும் வேலையால் நின்றது. இது எல்லாவற்றையும் சொல்லி கேட்டுப் பார்ப்பம். தந்தால் தாறாங்கள்இ தராட்டில் போகட்டும். இப்போது அவள் மனதில் ஒரு அமைதி.
வெள்ளிக்கிழமை தோய்ந்து விட்டு சாமிப்படத்தின் முன்னால் நின்றாள் மனோகரி.
தெய்வமே இன்றைக்கு நேராகவே போகிறன். நான் மற்றவர்களை போலை விவாகரத்து செய்தனான் என்று சொல்லி காசு கேட்கவில்லை. வேலை செய்திருந்தால் மெற்றனிற்ரி காசாவது வந்திருக்கும். வயிற்றிலை பிள்ளை இல்லையென்றால் எப்படியும் நான் வேலை தேடி எடுத்திருப்பன்.
எல்லா வழியிலும் நொந்து போயிருக்கும் என்னை மேலும் சோதிக்காதே. இன்றைக்காவது இந்த வெல்பெயர் கிடைக்க வழி செய் அப்பனே. கடவுளைக் கும்பிட்டுக் கொண்டிருக்கும்போதே போன் மணி அடித்தது. வீபூதியை பூசிக் கொண்டு போய் எடுத்தாள்.
ஹலோ! நாங்கள் சிங்கப்பூரில் இருந்து கதைக்கிறம். மிஸிஸ் மனோகரியோடை கதைக்கலாமோ?
மனோகரிதான் கதைக்கிறன். யார் கதைக்கிறியள்?
உங்களின்ரை அவரை இங்கை சிங்கப்பூர் போலிஸ் பிடிச்சு வைச்சிருக்கினம். அவர் உடனை காசு அனுப்பட்டாம். லோயருக்கு கட்ட…… லைன் கட்டானது. போனை வைத்தாள் மனோகரி.
வாசுகியிடம் பஸ்ஸுக்கு வாங்கிக் கொண்டு வந்த நாலு டொலரும் மேசையில் கிடந்தது.