பெற்றவள் நினைவும் பிள்ளைகள் உறவும்!
என்னைப் பெற்று வளர்த்து எனக்குத் தாயாக இருந்த என் அம்மா தான் மீண்டும் குழந்தையாக பிறப்பதற்காக இறந்து இன்னொரு தாயைத் தேடி வேறு உலகம் போய்விட்டாள்.
அவளைத் திரும்பவும் குழந்தையாக பெறப் போகின்ற தாயும் ஒரு காலத்தில் அப்படியே அவளை விட்டு தான் மீண்டும் பிறப்பதற்காக இன்னொரு தாயைத் தேடிப் போய்விடுவாள்.
இவ்வாறாக எந்தத் தாயும் தன் பிள்ளையோடு நிலையாக இருக்காமல் தவிக்கும்படி விட்டு இன்னொரு தாயைத் தேடிச் செல்கின்ற கொடுமையுடையதாக இருக்கின்றதே இந்த உலகம்!
எனக்குத் தாயாகியாள் என்னை ஈங்கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள் தனக்குத் தாய்
ஆகியவளும் அதுவானாள் தாய் தாய்க்கொண்டு
ஏகும் அளித்து இவ்வுலகு
(சமணர்களின் நாலடியாரில் சொல்லப்பட்ட கருத்து)