புறாவும் எறும்பும்
கொடிய விலங்குகளும் பறவைக்
குலமும் கலந்திருந்த காட்டில்
விடியவிடிய ஒரு எறும்பு
வீழ்ந்து கிடந்ததொரு குளத்தில்!
தப்பிப் பிழைக்க வழிதேடித்
தவித்த அவ்வெறும்மை மரத்தின்
கொப்பில் அமருந்திருந்த புறாவும்
குனிந்து பார்த்துவிட்டு நினைக்கும்
சின்னப் பிராணியொன்றைத் தண்ணீர்
சிதைக்கப் பார்த்திருந்த பாவம்
என்னை வந்தடைய வேண்டாம்
எப்படியும் தப்பவைக்க வேண்டும்
இருந்த மரக்கிளையின் இலையை
எறும்பின் அருகினிலே புறாவும்
பொருந்த நீரினிலே போட
புற்றின் எறும்புகரை சேரும்
துன்ப நிலையில் எனக்குதவ
துணைக்கு வந்தவொரு புறாவே
அன்பு மிகுந்தவிந்தச் செயலை
அடியவனும் மறந்துவிட மாட்டேன்
என்றே எறும்புசொல்லிச் செல்ல
என்ன உதவியிது செய்யும்
என்றே நினைத்துக்கொண்டு புறாவும்
எறும்புக்கு விடைகொடுத்து அனுப்பம்
ஒருநாள் காட்டிலொரு வேடன்
உணவு தேடிவந்த பொழுதில்
இருநாள் உணவுக்கிது போதும்
என்றே புறாவைக்குறி வைத்தான்
வில்லைச் சத்தமின்றி வளைத்துப்
விரலால் குறவைத்த செயலை
நல்ல உறக்கத்தில் இருந்த
நமது புறாவறிய வில்லை
ஆபத்தில் உதவிசெய்த புறாவும்
ஆருயிரை இழக்குநிலை கண்டே
கோபத்தில் ஓடிச்சென்ற எறும்பு
குறிவைத்த வேடன்கால் கடிக்கும்
ஆவென்று ஒலியெழுப்பி வேடன்
அவ்வெறும்பின் கடியாலே கத்த
போவென்று விதிவிடுத்த புறாவும்
புரிந்துகொண்டு சிறகடித்துப் பறக்கும்
ஆபத்தில் கிடைக்கவரும் உதவி
அவரவரும் சேர்த்தபலன் ஆகும்
மூபத்துக் கோவிலுக்குச் சென்றும்
முடியாத பலனையது அளிக்கும்!
இரா.சம்பந்தன்