பல்லக்கும் – திருக்குறளும்
சில மனிதர்கள் சிவிகை எனப்படும் பல்லக்கிலே ஏறி அமர்ந்து செல்கின்றார்கள் இன்னும் சில மனிதர்களோ அந்தப் பல்லக்கைத் தூக்கிச் சுமந்து செல்கின்றார்கள்.
இந்தக் காட்சியைக் கண்ட பின்னும் அறத்தின் வழியே நல்லது செய்து வாழ்ந்தால் நன்மையும் அறம் தவறி வாழ்ந்தால் துன்பமும் ஏற்படும் என்று தனியாக நாங்கள் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
(திருக்குறள் – அறன்வியுறுத்தல் – குறள் 37)
Inquiring about virtues’ benefits? See that between The rider and bearer of a palanquin.
