நாலடியார் காட்டும் யாக்கை நிலையாமை!
மலையின் உச்சியிலே தூக்கி வைக்கப்பட்ட நிலவு போல யானையின் முதுகிலே அமைக்கப்பட்ட வெண்பட்டுக் குடையின் கீழிருந்து ஊர்வலம் சென்றவர்கள் கூட ஒருநாள் செத்துப்போனார்கள் என்று இந்த உலகத்தினால் இகழ்ந்து பேசப்பட்டார்களே ஒழிய சாவிலே இருந்தது தப்பி இந்த உலகத்திலே நிலைத்து வாழ்ந்தார்கள் என்று புகழ்ந்து பேசப்பட்டவர்கள் யாருமே இந்த மண்ணுலகத்தில் கிடையாது.
மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்ட டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.
(நாலடியார் யாக்கை நிலையாமை பாடல் 21)