நல்ல காலமும் – கெட்ட காலமும்.
·ஒருவனுக்கு கெட்ட காலம் வரும் போது விதியானது அவனின் அறிவில் தான் முதலில் கை வைக்கின்றது. அறிவைத்தான் முழுமையாகக் குறைத்து விடுகின்றது. அறிவு குறையும் போது தாழ்வுக்கு ஏதுவான காரியங்களை மிகப் படித்த அறிவாளியான மனிதன் கூட செய்து கொள்கின்றான்.
திரும்பவும் நல்ல காலம் அவனை வந்தடையும் போது விதி தான் குறைத்து வைத்திருந்த அறிவைத் திரும்பவும் கூட்டி விடுகின்றது. அப்போது தான் செய்த தவறுகளையும் இனி உயர்வுக்கு ஏதுவான காரியங்கள் எவை என்றும் அவன் உணர்ந்து கொள்கின்றான்.
பேதைப் படுக்கும் இழவு ஊழ் அறிவு அகற்றும்
ஆகல் ஊழ் உற்றக் கடை
(திருக்குறள் – ஊழியல் – குறள் 371)
இதன் பொருள்
இழவு ஊழ் அறிவு பேதைப் படுக்கும் – ஒருவன் கெட்டுப் போவதற்கான காலம் வரும் போது அவனது அறிவை விதி குறைத்துப் பேதையாக்கி விடும்.
ஆகல் ஊழ் உற்றக் கடை அகற்றும் – திரும்பவும் அவன் நல்லாக உயரும் காலம் வரும் போது விதியானது முன்பு குறைத்து வைத்திருந்த அறிவை திரும்பவும் பழைய நிலைக்கு உயர்த்தி விடும்.