நட்டம் ஒன்றுமில்லை!
எனது தாய் நாட்டிலே
எங்கள் வேலிகளை எல்லாம்
பயிர்களே மேய்ந்து விட்டன
மரங்கள் எல்லாம் கூட
நிழல் தேடிப் போய்விட்டன
மீன்களால் காயப்பட்ட
கொக்குகளையே
என் கண்கள் காண்கின்றன
காலையிலே சந்திரனையும்
மாலையிலே சூரியனையும்
உதிக்க வைக்கவே
தலைவர்கள் ஆசைப்படுகின்றார்கள்.
அவர்களின்
ஐந்தும் மூன்றும்
ஏழென்று சொல்லும்
ஆறியாமையை
இராஜ தந்திரம் என்று
ஏற்றுக் கொள்கிறான் என்னவன்.
பகைவனை வெல்லும்
தேச விடுதலைக்குப் பதிலாக
செத்துப் போகும்
ஆத்ம விடுதலையாவது
கிடைக்கட்டும் என் நாட்டுக்கு!
கொடிகளைக்
கோவணமாக்கிக் கொள்வதில்
எமக்கென்ன நட்டம்?
இரா.சம்பந்தன்