திருக்குறள் காட்டும் தவம்!
திருவள்ளுவரே நீர் எப்போதாவது தவம் செய்திருக்கிறீரா
நான் தினமும் தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றேன்.
தினமுமா எப்போது பார்த்தாலும் மனைவி வாசுகியோடு குடித்தனம் பண்ணிக்கொண்டு வீட்டில் இருக்கும் நீர் தினமும் எப்படித் தவம் செய்ய முடியும்
தவம் என்றால் என்ன என்று நீ நினைக்கிறாய்
ஒரு காட்டுக்கோ மலைக் குகைக்கோ போய் தனியாக யாருமில்லாத இடத்தில் அமர்ந்து கண்மூடிக் கொண்டு இறைவனை மட்டும் தியானிப்பது தானே தவம்.
பலரும் செய்வது அதுதானப்பா. ஆனால் உண்மையான தவம் அதுவல்ல.
எனக்குப் புரியல்லே
ஒருவன் தனக்கு மற்றவர்களாலோ மற்றவைகளாலோ வரும் துன்பத்தை எதிர்ப்பேதும் காட்டாமல் பொறுத்துக் கொள்வதும் தான் பிறருக்கோ பிறவற்றுக்கோ ஒரு துன்பமும் செய்துவிடாமல் கவனமாக இருப்பதும் தானப்பா தவம். அந்தத் தவத்தை நான் வீட்டிலே இருந்து தினமும் செய்கின்றேன்.
உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்துக்கு உரு
(திருக்குறள் – தவம் – குறள் 261)