|

திருக்குறள் காட்டும் கண்ணும் காதலும்!

ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராகக் காதலித்துக் கொண்டே பொது இடங்களில் மற்றவர்கள் முன்னிலையில் முன் பின் தெரியாத புதியவர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டு சாதாரணமாக நடந்து ஏமாற்றும் நடிப்புத் தன்மை காதலர்களிடம் காணப்படுகின்றது.

பல பிள்ளைகளின் காதல் காலம் தாழ்ந்து பெற்றவருக்கு தெரிய வருவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

ஏதிலர் போல பொதுநோக்கு நோக்குதல்

காதலர் கண்ணே உள

(திருக்குறள் – குறிப்பு அறிதல் – குறள் 1099)

ஏதிலர் போல – முன்பின் தெரியாதவர்கள் போல

பொது நோக்கு நோக்குதல் – தங்கள் காதலை மறைத்து மற்றவர்களை பார்ப்பது போல தாம் விரும்பி இருப்போரையும் பார்த்து பிடி கொடுக்காமல் நடந்து கொள்ளும் தன்மையானது

காதலர் கண்ணே உள – காதலிப்போரிடம் காணப்படுகின்றது.

The look indifferent, that would its love disguise,

Is only read aright by lovers’ eyes.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.