திருக்குறளும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும்!
மனிதர்கள் பயப்பட வேண்டியவை எவை உண்டோ அவற்றுக்கெல்லாம் பயப்படுதல் தான் புத்திசாலித்தனம். அறிவாளிகள் வீம்பு காட்டாமல் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். அப்படி இல்லாமல் பயப்பட வேண்டியவற்றுக்கு பயப்படாமல் நடக்க ஒருவன் நினைத்தால் அதை விட முட்டாள் தனம் வேறு இருக்கமுடியாது.
அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
(திருக்குறள் – அறிவுடமை – பாட்டு 428)
இதைத்தான் பட்டுக் கோட்டையார் ஆளுக்கு ஒருவீடு என்ற படத்துக்கு பாட்டு எழுதும் போது பல்லவியாக அங்கே கொண்டுவந்தார்.
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
ஆவலை வெளியிடவெகு நேரம் ஆகுமா
சுசீலா ஸ்ரீநிவால் குரலில் அமைந்த மதுரமான பாடல் இது.இதிலே அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா என்ற வரிதான் அந்தத் திருக்குறள் ஆகும்.