|

திருக்குறளும் உரைத் தவறும்!

பத்துக் கறிகளோடு விருந்து படைப்பவர்கள் வடை பாயாசம் வைக்கலாம். சிக்கனமாக இருக்கும் சோற்றையும் கறியையும் குழைத்து உருண்டையாக கொடுக்கும் இடத்தில் வடை பாயாசம் வைப்பார்களா?

அது போல ஈரடிக் குறள் மூலம் சுருக்கமாகப் பேச வந்த வள்ளுவர் ஒரே கருத்துடைய இரண்டு சொற்களை ஒரே குறளில் பயன்படுத்தி இருப்பாரா என்ற சந்தேகம் நெடுங்காலமாக எனக்கு உண்டு..

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக உடையன. அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடையது. இது பரிமேலழகர் உரை. ஆதி பகவனை ஆதி ஆகிய பகவன் என்று இரண்டு பெயர்கள் ஒட்டிவரும் பண்புத் தொகை என்கிறார் அவர். இது தவறு.

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டு தோன்றின. அது போல ஆதி உலகம் பகவன் எனப்படும் சூரியனில் இருந்து தோற்றம் பெற்றது என்பதே சரியானதாக இருக்கும் என்பது எனது எண்ணமாகும். பகரப்படுதலால் பகவன். பகருதல் என்றால் உமிழ்தல் வெப்பத்தை உமிழுதல் விஞ்ஞான முடிவும் இதுவே.

சூரியன் வெடித்து அதன் ஒரு பகுதி காலப்போக்கில் குளிர்வடைந்து பூமியான கதையை வள்ளுவன் சொல்லுவதாகத் தான் இந்தக் குறள் எனக்குத் தோன்றுகின்றது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.