பார்வதி கேட்ட செல்போன்!
பார்வதி
இறைவா மனிதர்கள் வைத்திருப்பது போல் எனக்கும் ஒரு செல்போன் வேணும்
இறைவன்
பார்வதி அதனால் உனக்குப் பயனொன்றும் இல்லை. செல் இல்லாமலேயே நினைத்த கணத்திலேயே எவரோடும் தொடர்பு கொள்ளும் சக்தி தான் உனக்கு இருக்கின்றதே.
பார்வதி
இல்லை அவர்கள் பயன்படுத்தும் செல்போனுக்கு உள்ளே இருக்கும் சிம் என்னைக் கவர்ந்து விட்டது. ஒரு சிறிய மென் பொருள் எத்தனை நினைவாற்றலைக் கொண்டிருக்கின்றது. அது எனக்கு வேணும்.
இறைவன்
மனிதர்கள் பயன்படுத்துவதை விடச் சிறந்த சிம் காட்டுகளை நாம் படைத்திருக்கின்றோம் அது உனக்குத் தெரியுமா
பார்வதி
மனிதர்கள் பயன்படுத்துவதை விட சிறந்ததா அது எப்படி இருக்கும்?
இறைவன்
செல்லையும் பற்றரியையும் இணைத்துக் கொண்ட பின்னர் மனிதர்கள் சிம்மைப் பயன்படுத்தி அதை இயக்குவது போல நாமும் உடல்களையும் உயிர்களையும் இணைத்த பின்பு சிம்மைப் பயன்படுத்தித்தான் அவற்றை இயங்கச் செய்கின்றோம்.
பார்வதி
அந்தச் சிம்மை நான் பார்க்கலாமா? அதன் பெயர் என்ன?
இறைவன்
அதை யாரும் பார்க்க முடியாது. அதற்கு உருவமும் கிடையாது. ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாற்றவும் முடியாது
அதன் பெயர் தான் மனம்.