காலத்தின் வேலை என்ன?
தினமும் பொழுது விடிவதில் தொடங்கி அது மறையும் வரையுள்ள இடைவெளியை ஒரு நாள் என்று எங்களுக்கு கணக்கு காட்டி ஏமாற்றிவிட்டு காலமானது அந்த நேரத்தில் எங்கள் உடலில் இருந்து உயிரை ஒரு கணப்பொழுதும் ஓயாமல் சிறிது சிறிதாக அறுத்து விடுவித்துக் கொண்டிருக்கின்றது.
எனவே காலம் என்பது எங்கள் வாழ்வை அறுத்துப் பிரித்து அழித்துவிட வந்த வாள் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
(திருக்குறள் – நிலையாமை – குறள் 334)
இரா.சம்பந்தன்.