கண்ணதாசனும் குறுந்தொகையும்!
என் தாயும் உன் தாயும் யார் யாரோ? அவர்களுக்குள் சொந்த பந்தமோ நட்போ இல்லை அது போல என் தந்தையும் உன் தந்தையும் முன்பே உறவானர்களா என்றால் அதுவும் இல்லை. முன் பின் தெரியாத நீயும் நானும் எந்த உறவின் வழியாக அறிந்து இன்று காதல் கொண்டோம்?
செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே!
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!
(சங்க இலக்கியம் குறுந்தொகை பாடல் 40)
யாய் – என்னுடைய அம்மா ஞாய் – உன்னுடைய அம்மா
எந்தை – என்னுடைய அப்பா நுந்தை – உன்னுடைய அப்பா
இந்தக் குறுந்தொகைப் பாடல் பரிசு என்ற திரைப்படத்துக்குப் பின்வரும் பாடல் எழுதும் போது கண்ணதாசனால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
என்ன என்னஇனிக்குது ஏதேதோநினைக்குது
வண்ணவண்ண தோற்றங்கள்அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குதுஅஞ்சு ரூபா
கல்லால்அடித்த அடி வலிக்கவில்லை அந்தக்
காயத்திலே உடம்புதுடிக்கவில்லை
நீ கண்ணால்அடித்த அடி வலிக்குதடி
அந்தக் காயத்திலே மனதுதுடிக்குதடி
தாயார் அணைத்திருந்த மயக்கமுண்டு நான்
தந்தை மடியிருந்த பழக்கமுண்டு
நீ யாரோ நான் யாரோ தெரியாது
இன்று நேர்ந்தது என்னவென்று புரியாது
கண்ணதாசன் – நீயாரோ நான் யாரோ தெரியாது
குறுந்தொகை – யானும் நீயும் எவ்வழி அறிதும்