ஒளவை காட்டிய நாகமும் நஞ்சும்!
பிறருக்குத் துன்பம் செய்யக்கூடிய நஞ்சு தன்னிடம் இருப்பதை உணர்ந்து நாக பாம்பானது யார் கையிலும் சிக்கிக் கொள்ளாமல் பயத்தோடு புதரிலும் பற்றிலும் மறைந்து வாழும்.
ஆனால் தன்னிடம் மற்றவர்களுக்கு கேடு விளைவிக்கும் எதுவும் இல்லாத காரணத்தால் தண்ணீர்ப் பாம்பானது யாருக்கும் அஞ்சாது நீர் நிலைகளின் கரைகளிலே பலரும் காணும் வண்ணம் படுத்திருக்கும்.
அது போல மனத்திலே கெட்ட சிந்தனையும் கள்ளக் குணமும் உள்ள மனிதர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு அஞ்சி ஒதுங்கி மறைந்து வாழவே நினைப்பார்கள்.
மனத்திலே எந்த வஞ்சகமும் இல்லாத குற்றமற்ற மனிதர்கள் பிறர் தீங்கு செய்வார்களோ என்ற பயமின்றி எந்த இடத்திலும் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு-நெஞ்சிற்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.
இரா.சம்பந்தன்.