|

இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் திருப்புகழ்!


ஈழமண்டல இறைவா நமோநம
இணுவையம்பதி தலைவா நமோநம
வேழமுகவடி வானாய் நமோநம – எங்களூரில்
வானில்தொடுபனை தெங்கொடு திராட்சையும்
வாழைபலாப்பழம் மாங்கனி அவற்றுடன்
தேனும்பாலொடு மலர்களும் ஏற்றிடும் – பிள்ளையாரே
கரியதேவியாள் மைந்தனே நமோநம
கங்கையேந்தினார் பாலனே நமோநம
பெரியகாதுடைக் கடவுளே நமோநம – இணுவையூரில்
காலையெழுந்ததும் திருநீறு பூசுதல்
கைகள்கூப்பியுன் கோயிலை வணங்குதல்
வேலையெனத்தினம் விரதமாய் கொண்டவர் – வாழ்வதாலே
விரும்பியுறைகின்ற வித்தகா நமோநம
வேண்டுவரமெலாம் அருளுவாய் நமோநம
கரும்பில்வெல்லமாய் கலந்தவா நமோநம – இந்தவூரில்
மஞ்சுதடவிடும் கோபுரம் கோயிலும்
மணிகள் உயாந்தவோர் மண்டப இடங்களும்
நெஞ்சுகனிந்திட நாங்களா கட்டினோம் – இல்லையில்லை
பஞ்சமுகக்கரி கோலமே நமோநம
பாரதமெழுதிய கொம்பினாய் நமோநம
அஞ்சுதலையொழி ஆண்டவா நமோநம – எங்கவாழ்வில்
என்னவேண்டுமோ அனைத்தையும் தந்துவுன்
எண்ணம்போலவே அனைத்தையும் செய்கிறாய்
இன்றுநடப்பதும் உன்னருள் அல்லவோ – யாகமெல்லாம்
மன்னர்சேகரப் பிள்ளையே நநோநம
மண்ணில் இணுவிலும் கோவிலும் நமோநம
உன்னையெண்ணிட அருளுவாய் நமோநம – இன்றுபோல
எங்கள்மண்ணிலே என்றுமே இருந்துநீ
என்னவேண்டுமோ எண்ணியே தந்தெமை
திங்கள்சூடுவார் நெறியிலே செலுத்துக – பெருமாளே
இரா.சம்பந்தன் (கனடா)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.