|

அவரையும் அவளும்!

புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் கனடா மண்ணில்

புறநிலத்தில் வீட்டுக்குப் பின்னால் தோட்டம்

நிலமிருந்த புல்லகற்றி மனைவி வைத்து

நீண்டகுழாய்த் தண்ணீரை தினமும் விட்டாள்

பலமிகுந்த தடிகள்பல வாங்கி வந்தே

பந்தலொன்று அவரைக்கு அவளும் போட்டாள்

சிலகிழமை ஆனவுடன் அவரை சென்று

சிறுவேலி இடைவெளியால் அடுத்த வீட்டில்

பலகாலம் பழகியவோர் நண்பர் போல

பலபூக்கள் காயென்று காய்த்துத் தொங்க

கலமோடு வந்தவர்கள் பறித்துச் சென்று

கறியாக்கிச் சாப்பிட்டார் விரும்பும் போது

தலமாட்டில் என்னருகே இருந்து ஓர்நாள்

தன்னுடைய கவலையினை மனைவி சொல்ல

பலகாலம் படிப்பித்து வளர்த்த ஈழம்

பயனின்றி போகவிட்டு அடுத்த நாட்டு

நிலமோடு குடியெறி வரியும் கட்டி

நீண்டபயன் கொடுக்கும்நாம் அவரை சென்று

குலயாகக் காய்க்குதென்று குறைகள் சொல்லக்

கூடாது அதுகுற்றம் என்றேன் நானும்!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.