சின்னத்தாயி

 

சின்னத்தாயிக்கு வயிறு பற்றிஎரிந்தது. உடைந்த சுற்றுமதிலின் ஓரமாகநின்றுகொண்டிருந்த வேப்பமரத்தின் கீழ் அமர்ந்துகொண்டாள்.

வேப்பமரம் இலைதெரியாமற் பழுத்துக்கிடந்தது.

மைனாக்களும் குருவிகளும் காகங்களும் வேப்பம்பழங்களைத்தின்று
கோதுகளைத்துப்பிக்கொண்டிருந்தன.

ஓவ்வொருவருசமும் இந்த வேப்பம்விதைகளையும் கோதுகளையும் கூட்டிஅள்ளி உரப்பைகளிற் கட்டிவைப்பாள் சின்னத்தாயி. மழைக்காலத்தில் கட்டுப்படுத்தமுடியாமற் பெருகிவரும் நுளம்பைக்கட்டுப்படுத்த மாலைவேளைகளிற் புகைபோடுவாள். கண்டகண்ட நுளம்புமருந்துகளைவிட வேப்பம்புகை சுவாசத்துக்குநல்லது.செலவும் மிச்சம். விசஜந்துக்களை வீடுவாசலுக்கு நெருங்கவிடாது.

பஸ்சிலிருந்துஇறங்கி நடந்துவந்ததில் களைப்பாயிருந்தது. சுற்றிச்சுழன்று வீட்டைப் பார்த்தாள். அப்படி ஒன்றுஇருப்பதற்கான அடையாளமே தெரியவில்லை.உடைந்துகிடக்கும் மதிலைக்கடந்து உள்ளேபோகப் பயமாக இருந்தது.ஆளுயரத்துக்குமேல் பற்றை வளர்ந்து கிடந்தது. “என்ர ராசா நீயும் நானும் பிள்ளயளும் சந்தோசமாயிருந்த வீடடைப்பாப்பியாராசா?…..”  பலவருடங்களுக்குமுன் செத்துப்போன தன்கணவனிடம் முறையிட்டாள்.

குணபதியின் முதுசம்தான் அந்தநிலம்.தென்னை பனை கமுகு வாழை மா பிலா தோடை எலுமிச்சை பாலை முதிரை என்று இல்லாத மரங்களே இல்லை.

வெறுந்தரிசாகக் கிடந்தகாணியை கணபதிதான் தன் வியர்வையைஊற்றி ஊற்றி சோலையாக்கினார்.

“என்ர மகராசன் கைபட்டா எல்லாம் பொன்தான்….” பெருமமுச்செறிந்தாள். வைத்து வழிபட்டார்கள். அம்மன்தான் அவர்களின் குலதெய்வம்.

காலையில் கிணற்றடியில் முகங்கழுவிவிட்டு பசுக்களைப்பறித்து அம்மனுக்குவைப்பார்கள்.
மாலையில் நல்லெண்ணையில் விளக்கேற்றுவார்கள்.
சின்னததாயிக்கு ஏழு பிள்ளைகள். ஐந்துதான் உயிர்தப்பின.
முதுமையில் அவளோடு யாருமே இல்லை. எல்லோரும் கல்யாணம்செய்து கணவன் குடும்பம் குழந்தை குட்டி என்று போய்விட்டார்கள்.

மீசை அரும்பிக்கொண்டிருந்த பதினெண்வயதில் வெளிநாட்டுக்கு அகதியாய்போன கடைக் குட்டி நாகேந்திரன் இருபது வருசங்களுக்குப்பிறகு மனைவி பிள்ளைகளுடன் ஊருக்குவந்து அவளைப்பார்த்தான். வெள்ளையாய் குண்டுகுண்டாய் அவன்கூட்டிவந்த அவனுடைய பிள்ளைகளைப்பார்ததுப் பரவசப்பட்டாள்சின்னத்தாயி. மருமகள்கூட மாமிமாமி என்று
அடிக்கடி அழைத்துப்பரவசப்படுத்தினாள்.

நாகேந்திரனுக்கு வீட்டை இடித்து புதுமையாககட்டவேண்டுமெனன்ற ஆசைவந்துவிட “நான் உயிரோடை இருக்கும்வரை ஆரும் வீட்டிலை கைவைக்கேலாது…” சின்னத்தாயி மறுத்துவிட்டாள்.

கணபதி இறந்துவிட்டாலும் அவரின் ஆத்மாவும் துடிப்பும் வியர்வையும் இந்தநிலத்தில் நிரம்பிக்கிடப்பதாக அவள் நினைத்தாள்.

கடைசிகாலத்தில் கணபதியின் உடல் தளர்ந்துபோனதும் வீட்டின் முன்விறாந்தையிற் சாய்மனைக்கதிரை போட்டு எப்பொழுதும் படுத்திருப்பார்.

அவரின் நாக்குநாணயத்துக்கு ஊரில் நல்ல மதிப்பு. அயலில் ஏதாவது எல்லைத்தகராறு அல்லது கோபதாபம் என்றால் கணபதி அதைத் தீர்த்துவைப்பார்.

ஊரில் பொறுப்புஏதும் வாங்காமல் வட்டிக்குபணம்கொடுப்பவர்கள் கணபதியைத்தான் சாட்சி வைப்பார்கள். விடலைப் பருவத்தில் பெற்றவரின் சொல்கேளாமல் திமிறும் காளைகளுக்கு புத்திமதி கூறுவதும் அவர்தான்.

அவர் ஒருபோதும் குடித்துவெறித்ததில்லை.கூடுவார்கூட்டிக் கும்மாளம் அடித்ததில்லை.
“தாயி இண்டைக்கு மீனில ஒரு அம்மிக்கறி வையணை… .நல்லாஇருக்கும்..” என்பார்.

மீன்காரனிடம் மீன்வாங்கி…. .உள்ளிமிளகுகமகமக்க அரைத்து ஒரு குழம்புவைப்பாள்.
“தங்கராசுவையும் சாப்பிடக்கூப்பிடணை… ஆரோடையும் சேர்ந்து ரசிச்சுருசிச்சு சாப்பிட வேணும்போல கிடக்கு…….” என்பார்.
விசேஷமான கறிவைக்கும் நாட்களில் தங்கராசுவோ வேலுப்பிள்ளையோ சண்முகமோ யாரோஒருவரை எப்படியும் அழைப்பிப்பார்.

சின்னத்தாயி வீட்டில் ஒருகணம்கூட சும்மாஇருக்கமாட்டாள். காணிக்குள் தேங்காய்தேடிப் பொறுக்குவாள். பனைமட்டை சேகரிப்பாள். நாற்றுமேடை போடுவாள்.
கணபதியின் ஆறடிஉயரம் வயோதிபத்தின் காரணமாக மெல்லமெல்ல குறுகிவந்தபோது….
சின்னத்தாயியை கவலை ஆட்கொண்டது. பிள்ளைகளுக்கு அறிவித்தாள். நாட்டுநிலைமையை காரணம்பாட்டி அவர்கள் வரத்தயங்கினார்கள்.

இறப்பதற்கு சில நிமிடங்களுக்குமுன்னர்கூட அவளை அழைத்து “தாயி…சுக்குப்போட்டு சுடுதண்ணி கொஞ்சம் தா……” என்று கேட்டார்.
“ஏ….ஏன்…ஏன்….உங்களுக்கு என்னசெய்யுது?……..” சின்னத்தாயி ஓடிப்போய் பக்கத்தில் நின்று பதறினாள்.
“எனக்கு ஒண்டுமில்லதாயி…பதட்டப்பட்டு ஊரக்கூட்டிபபோடாத…சாதுவா நெஞ்சுக்க குத்துறமாதிரி கிடக்கு……பயப்பிடாத….போம்மாதாயி……”

சின்னத்தாயி ஓடிப்போய் சுடுதண்ணீர் வைத்து சுக்குக்குத்திப்போட்டு தேநீர் தயாரித்துக் கொண்டுவந்தபோது அவர் அசைவற்றுக்கிடந்தார்.

அதன்பிறகு ஆகவேண்டிய காரியங்களெல்லாம் ஆயின.
எட்டுச் செலவெல்லாம் முடிந்து ஊரும் உறவுகளும் தத்தம்பாட்டில் போயின.
“எண அம்மா இவ்வளவுகாலமும் ஐயாவும் நீயும் ஒராளுக்கொராள் துணையெண்டு விட்டம்.
இனி நீ உங்கை தனிய இருக்கேலாது….பேசாம இனிஎங்களோடை வந்திடு…….”
மூத்தவள்மீது ஆத்திரம் பொத்துக்கொண்டுவந்தது.
“கொப்பற்ற மூச்சும்வேர்வையும் முழுக்கமுழுக்க இந்த நிலத்திலதான் கிடக்குது….இந்தக் கட் டேல உயிர்இருக்கிறவரைக்கும் வேறஎங்கயும் வரமாட்டன்…ஓ…”
“அப்ப….தனியக்கிடந்து சாகப்போறியே……..”
“என்னதனிய…ம்…அயலட்டையில எவளவுசனமிருக்கு….எனக்கொண்டெண்டால் உங்களுக்குமுதல் அதுகள்தான் ஓடிவருங்கள் தெரியுமே?…….அதோடை இந்தவளவுக்குள்ளநிக்கிற மரங்கள்..ஆடுமாடு…கோழியள்….இதுகளிலதான எனக்குஉயிர்…”

சின்னத்தாயி யாருக்கும் அசையமறுத்துவிட்டாள்.

“அவவின்ர விருப்பமென்னவோ அதன்படிவிடுங்கோ…மிச்சம் பிறகுபாப்பம்…..” நாகேந்திரன்
சொல்ல அடங்கிப்போனார்கள்.
எட்டுச்செலவுக்குப்பிறகு அந்தியேட்டி வீட்டுக்கிரியைகளுக்கு மீண்டும் ஊரும்உறவுகளும்
கூடின.மற்றமற்றநாள் மீண்டும் வெறுமை ஆட்கொண்டது.
“ஆத்தா….உன்னைநம்பித்தான்தாயே இந்தமண்ணிலை இருக்கிறன்தாயே……” கிணற்றடியிலிருக்கும் அம்மன்முன் கைகூப்பினாள்.

“அம்மா….மாலைகட்டுறதுக்கு கொஞ்சம் ப+ வேணும்……..”
நாலுமணிக்கு முன்மண்டபத்தில கூட்டமம்மா…நாலுகதிரைவேணும்……..”
“இந்த மோட்டச்சயிக்கிள ஒருக்காவிட்டுட்டுப் போறனம்மா….விடியவந்து எடுக்கிறன்……..”
எப்படியோ பேர்ஊhh தெரியாத பலருக்கு அவள் அம்மாவாகிப்போனாள்.
“ஒருதருமில்லையெண்டு கவலைப்படாதேங்கோம்மா…..நாங்களிருக்கிறம்….நீங்கள்செத்தா
நாங்கள் ஆரெண்டாலும் வந்து கொள்ளிபோடுவம்……..”   தான்பெற்ற பிள்ளைகள் ஐந்தும் தங்கள்தங்கள் குடும்பம் என்றுபோய்விட….யார்யாரோ பெற்ற பிள்ளைகள் தன்னை அம்மா
என்று அன்புபர்ராட்டியபோது….உண்மையிலேயே சின்னத்தாயி பரவசப்பட்டுப்போனாள்…….ஆனால்…காலம் உக்கிரம் கொண்டது…..

சொன்னவர்கள் ஒவ்வொருவராக இல்லாமற்போய்க்கொண்டிருந்தார்கள்….ஒன்று பத்து நூறு
என்று சாவு உயிரெடுத்துக்கொண்டிருந்தது………
எல்லாமே அவளுக்கு கனவாகிப்போய்விட்டது.

கடந்துபோனநாட்களும் கடந்துபோனநிகழ்வுகளும் அதிபயங்கரமாய் அவளை அழுத்தின. கொத்துக்கொத்தாய்….கண்ணெதிரே சிதறிப்போன சித்திரங்களாய்….இழப்பும்
கண்ணீரும் துயரமும் வெறுமையுமாய்……..
அவளுடைய அறுபத்திநாலுவருட வாழ்க்கையில் கற்பனையிற்கூட நினைத்துப்பார்த்திராத
அவலங்கள்…….
நாய்படாப்பாடுகள்பட்டு……உயிருக்கு அஞ்சிஅலைந்து….
“கடவுளே…இனியொருஜென்மம் இப்பிடி வேண்டாமப்பா…….”
சோற்றுப்பருக்கைக்கு ஏங்கிய நாட்கள்…..புளித்துநாறிய உணவுப்பொதிக்கு வரிசையிற் கையேந்தி நின்றநாட்கள்….ஒருகுவளை குடிதண்ணீருக்காக பலமணிநேரம் தொண்டை
வுரளக்காத்திருந்த நாட்கள்…….
கழிப்பறைக்குக் காத்திருந்த நாட்கள்……….வாரக்கணக்கில் குளிக்கதண்ணீரில்லாமல் கிடந்து….உயிருடனேயே பிணமாய் நாறியநாட்கள்……….அவமானப்பட்டு கூனிக்குறுகிக்
கிடந்தநாட்கள்…….
நாய்களைப்போல…..நரிகளைப்போல…..விரட்டியடிக்கப்பட்டு தெருத்தெருவாய் அலைந்த நாட்கள்……..

அவளின் பிள்ளைகள் பதறிப்போனார்கள்………சின்னத்தாயி உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று தெரியாமற் தவித்துப்போனார்கள்.
“அம்மா…அம்மா…..” என்று துடித்துப்போனார்கள்.
குடைக்குட்டி நாகேந்திரம் பைத்தியம்பிடித்தமாதிரி பாரிஸ் தெருக்களில் அலைந்திருக்கி
றான்.
சின்னத்தாயி உயிரோடு இருப்பதை உறுதியாகத்தெரிந்தபிறகு மூத்தவள் கலா அடித்துப்
பிடித்து ஓடிவந்தாள்…..
“இனி….உன்னை ஒருநிமிசம்கூட இஞ்ச இருக்கவிடம்….வந்திடு…..”
“இவ்வளவுக்கையும் இருந்து தப்பிட்டன்…..இனி எனக்கொண்டும் நடக்காது….நான் என்ர
ராசா இருந்து வேர்வைசிந்தின இடத்துக்குத்தான் போப்போறன்….அந்தநிலத்திலதான்நான்
உயிர விடோணும்….என்ர ராசாக்குப்பக்கத்திலேயே நானும்……..”
“உனக்கென்னண…விசரே நாளைக்கு ஊருலகம் என்னசொல்லும் சொல்லு பாப்பம்……”
“……………………………….”
“மனுசி எல்லாரையும் வளத்துஆளாக்கிவிட….வயதானகாலத்திலை மனுசிய ஒருதரும்
பாக்கேல்ல எண்டு சொல்லாதே….ம்…..”
“தயவுசெய்து என்னை ஒருதரும் உங்களோட வரச்சொல்லிகேக்காதேங்கோ…வெளிநாட்டிலையோ…வெளிஊரிலையோ இந்தக்கட்டைக்கு
வேக விருப்பமில்ல…..”
“ஐயாவே உந்த மனுசியின்ர பிடிவாதத்தை உடைக்கேலாமத்தான…பணிஞ்சுபோறவர்….
விடுங்கோ…தன்ர விருப்பப்படி நடக்கடடும்……”

சின்னத்தாயி ஊருக்குவந்துவிட்டாள்.
மெயின்றோட்டுப்பக்கம் ஆள்நடமாட்டமிருந்தது. அவளின்வீட்டடிக்கு ஆட்கள் வந்துசேரவில்லை. ஒழுங்கையும் காணிகளும் காடுபற்றிக்கிடந்தன.
தென்னை மரங்;கள் தலையறறுநின்றுகொண்டிருந்தன.
“யாராவதுரெண்டுபேரை கூலிக்குகூட்டிவந்துதான் வளவைத் துப்பரவுபடுத்தவேணும்…”
நினைத்தபடிதான் ; வேப்பமரநிழலில் அமர்ந்திருந்தாள்சின்னத்தாயி.
யாரோஇரண்டுபேர் மோட்டார்ச்சயிக்கிளில் அவளைப்பார்த்துப்பார்த்துப் போனார்கள்.அவளுக்
கும் அவர்களை யாரென்று அடையாளம்தெரியவில்லை.தன்னோடு எடுத்துவந்த பையைத்
திறந்து வெற்றிலைபாக்கு போட்டுக்கொண்டாள்.
வெற்றிலைபாக்கை மென்றபடியே…..புண்ணியமூர்த்தியின் காணியையும் பார்த்தாள். அதுவும் பற்றைபிடித்துக்கிடந்தது.
மெயின்றோட்டுப்பக்கமிருந்து வந்து அவளின்வீட்டு கேற்றடியில் நின்ற லானட்மாஸ்டர் ஒன்று அவளின் கனைத்தை திருப்பியது.
அதில் மூன்றுபேர்இருந்தார்கள். ஒருவன் இளைஞன். மற்றஇருவரும் தலைமுடியும் தாடியும் நரைத்தவர்கள்.அவர்களை அவள் ஒருபோதும் பார்த்ததில்லை.
அந்த இளைஞன் இறங்கிவந்து அவளது வீட்டுக்கேற்றை இழுத்து திறந்தான்.
“தம்பி…தம்பி…ஏனப்ப இந்தக்கேற்றை இப்பிடித்திறக்கிறாய்?……..” கேட்டாள்.
“கள்ளனுகள் எடுத்ததுபோக….கொஞ்சசாமான்கள் மிஞ்சிக்கிடக்கு……….ஏத்தப்போறம்”
என்றவன் லான்ட்மாஸ்டரை உள்ளே வரும்படி கைகாட்டினான்…….
“எ….என்ன…என்ன….சாமான் ஏத்தப்போறியளோ…….ஆர் உங்கள ஏத்தச்ளொன்னது?…”
“இது……..எங்கட சொந்தக்காறற்ரை வீடு……அவைதான ஏத்தச்சொன்னவை…………”

“இஞ்சபாருங்கோ தம்பியவை………இது என்ரகாணி………..நானும் எனரபுரு~னும் வேர்வை நிலம்………”
“கிழவி ஏதோ அடையாளம் மாறிச்சொல்லுது……நீ உள்ள எடு……….”
“தம்பியவை……இது என்ர காணிதான்………அங்க…அந்த தேக்கு புளி மா பலா தோடை…தென்னை…பனை…பப்பாசி…எல்லாம் நாங்கள் வைச்சதுதான்………….”

அவர்கள் அவள் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
லான்ட்மாஸ்டர் இரைந்துகொண்டு உள்ளேபோனது.

இரா.சிவசக்தி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.