சின்னத்தாயி

  சின்னத்தாயிக்கு வயிறு பற்றிஎரிந்தது. உடைந்த சுற்றுமதிலின் ஓரமாகநின்றுகொண்டிருந்த வேப்பமரத்தின் கீழ் அமர்ந்துகொண்டாள். வேப்பமரம் இலைதெரியாமற் பழுத்துக்கிடந்தது. மைனாக்களும் குருவிகளும் காகங்களும் வேப்பம்பழங்களைத்தின்று கோதுகளைத்துப்பிக்கொண்டிருந்தன.