வாரியார் சொன்னது
குழந்தை பிள்ளை பாலகன் மகன் மைந்தன் குமாரன் புத்திரன் என்ற சொற்பதங்கள் எல்லாம் ஒரே பொருள் கொண்டவை அல்ல.
குழந்தை – பெற்றார் உடலோடு குழைந்து வாழ்வதால் குழந்தை
பிள்ளை – பெற்றோர் சம்பாத்தியத்தில் தங்கியிருப்பவன் பிள்ளை
பாலகன் – பெற்றோரால் வழி நடத்தப்படுபவன் பாலகன்
மகன் – தான் உழைத்து பெற்றோரைக் காப்பவன் மகன்.
மைந்தன் – பெற்றாரொடு சேர்த்து சுற்றத்துக்கும் உதவுபவன் மைந்தன்
குமாரன் – பெற்றாருக்கு புத்தி சொல்பவன் குமாரன்
புத்திரன் – முன்னோர்கள் நற்கதி அடையப் பாடுபடுபவன் புத்திரன்
(வாரியார் பேருரை)