நேரமும் மனமும்!
தெருவிலே ஒரு பஸ் வண்டி செல்கின்றது. அதன் சாரதி அந்தத் தெருவிலே குறிக்கப்பட்ட வேக அளவைப் பின்பற்றி நிதானமாக சரியான வேகத்தில் தான் செலுத்துகின்றார்! ஆனால் உள்ளே தீபாவளி விடுமுறைக்கு மனைவியைப் பார்க்க ஊருக்குப் போகும் ஒருவன் நுனி இருக்கையில் இருந்து கொண்டு ஐயோ வயோதிபங்களை றைவராகப் போட்டு பஸ்சை எறும்பு போல ஊர வைக்கிறாங்களப்பா என்று திட்டுறான்! அதே பஸ்சில் வாழ்க்கையில் எல்லாச் சுக போகங்களையும் அனுபவித்த ஒரு முதியவர் இருந்து கொண்டு விடலைப் பையன்களை எல்லாம் றைவராகப் போட்டு பேய் போல பஸ்சை ஓட்டுறாங்களப்பா! அள்ளிக் கொண்டு போய் எங்கையாவது மோதப்பா! உனக்கென்ன நட்டம்? என்று மனதுக்குள் திட்டுகின்றார்! ஆனால் பஸ் சரியான வேகத்தில் தான் சென்று கொண்டிருக்கின்றது! எனவே நேரம் போதவில்லை என்பதும் நேரம் போகவில்லை என்பதும் அவரவர் மனங்களைப் பொறுத்ததே அன்றிக் காலத்தைப் பொறுத்தது அல்ல!
புலவர் கீரன் கம்பராமாயணப் பேருரை