நான்கு குற்றங்கள்!
இளமைப் பருவத்திலே ஒருவன் படிக்காமல் காலத்தை வீணடிப்பது குற்றம்
தனக்கே போதிய வருமானம் இல்லாத போது பிறருக்கு உதவ நினைப்பது குற்றம்
உறவினர்கள் பக்கத்தில் இல்லாத போது பிறர் மீது கோபம் கொள்ளுதல் குற்றம்
தன்மீது அன்பில்லாதவர்கள் கைகளாலே உணவு வாங்கி உண்பதும் குற்றமாகும்.
இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
வளம் இலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
கிளைஞர் இல் போழ்தில் சினம் குற்றம் குற்றம்
தமர் அல்லார் கையகத்து ஊண்.
(பதினெண்கீழ்க்கணக்கு – நான்மணிக்கடிகை – பாடல் 92)