Lord Muruga

திருப்புகழ்!

இருபடைகள் மோத இரத்தமெங்கும் ஓட
இலங்கைநிலம் நீங்கும் – நினைவோடு
பெருமுயற்சி செய்து பெருந்துயரம் கண்டு
பின்கொழும்பு வழியால் – வெளியேறி
ஒருவிழியில் நீரும் மறுவிழியில் மகிழ்வும்
ஒன்றுபட விமானம் – தனிலேறி
குருவடிவாய் ஏச்ஷண்ட் குறித்தவழி வந்து
குதித்தபெரு நாடாம் – கனடாவில்
தெருவழியே சென்று திருடனைப்போல் நின்று
தேடியொரு வேலை – நான்செய்து
பொருள்தெரியா மொழியைப் பிழைபடவே பேசி
முழுமடையன் ஆகிக் – கிடந்தேனை
திருவருளால் மீட்டு ஸ்காபுரோவின் தெற்கில்
தெய்வமென நின்ற – முருகோனே
அருச்சனைசெய் சீட்டில் ஐந்துடொலர் என்று
அச்சடித்த பணத்தை – நான்நீட்டி
பிரச்சனைகள் தீர்க்கப் பேருதவி கேட்கும்
பிள்ளையெனும் கந்தப் – பெருமாளே!

இரா.சம்பந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.