தாள இசையும் இறைவனும்!
தாள இசையும் இறைவனும்!எமக்குத் தெரிந்த சுப்பிரமணி என்று ஒருவர் தெருவிலே போகின்றார் என்று வைத்துக் கொள்வோம்! அவரைச் சுப்பிரமணி என்று அழைக்கின்றோம்! அவர் திரும்பிப் பார்க்கவில்லை. உடனே குரலை உயர்த்தி ஏய் சுப்பிரமணி என்று அழைக்கின்றோம்! அதற்கும் அவர் திரும்பிப் பார்க்வில்லை என்றால் உடனே இரண்டு கைகளையும் தட்டிச் சுப்பிரமணி என்று அழைக்கின்றோம்! அப்போது சுப்பிரமணியோடு சேர்ந்து தெருவில் போகும் அனைவருமே எங்களைத் திரும்பிப் பார்க்கின்றார்கள் இல்லையா? அது போல இறைவனுக்கு முன்னே கையினால் தாள ஒலி எழுப்பிப் பாடும் போது அந்த இறைவன் மட்டும் எங்களைத் திரும்பிப் பார்க்கவில்லை. அவனோடு சேர்ந்து வேதங்கள் திரும்பிப் பார்க்கின்றன. உமாதேவி திரும்பிப் பார்க்கிறாள்! நவகோள்கள் பார்க்கின்றன! விநாயகர் பார்க்கின்றார். முருகன் பார்க்கின்றான்! இப்படிப் பல அருட்கண்கள் எம்மைப் பார்க்கும் பலனை பஜனை தந்துவிடுகின்றது!
தவத்திரு ஹரிதாஸ் கிரி