ஒவையின் விரக்தி!
நல்ல சாப்பாடு கிடைக்கும் போது இரண்டு நாட்களுக்குத் தேவையானதை ஏற்றுக் கொள் என்று சொன்னாலும் நீ ஏற்றுக் கொள்ள மறுக்கின்றாய்! இன்று சாப்பாடு கிடைக்கவில்லை பொறுத்துக்கொள் என்று சொன்னாலும் அதையும் ஏற்றுக் கொண்டு பொறுமையாக இருக்க மறுக்கின்றாய்! நான் சொல்லும் எதையும் கேட்காமல் மிகவும் துன்பம் தருகின்ற என் வயிறே உன்னோடு வாழ்க்கை நடத்துவது எனக்கு மிகவும் கடினமானதாக இருக்கின்றது!
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்…
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் – ஒருநாளும்
என்நோ அறியா இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது!
ஒளவையின் நல்வழி பாடல் 11