உதடுகளைத் தவிர்த்த திருக்குறள்!
ஒரு பொருளால் ஏற்படும் துன்பத்தைத் தவிர்ப்பதற்கு அந்தப் பொருளாலே கிடைக்கின்ற இன்பத்தைக் கை விடுங்கள் என்று ஒரு குறள் எழுதினார் திருவள்ளுவர்!
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
இதன்பொருள் யாது யாது பொருட்களின் தொடர்பை ஒருவன் துறக்கின்றானோ அந்த அந்தப் பொருட்களினால் அவன் நொந்து துன்பம் அடைதலும் ஏற்படாது! அதாவது ஒன்றிலும் பற்று வைக்கக் கூடாது என்பதாகும்!
இந்தக் குறளிலே என்ன இருக்கின்றது என்று கேட்கிறீர்களா? இந்தக் குறளை சொல்லும் போது உங்கள் உதடுகள் கூட இரண்டும் ஒன்றை ஒன்று தொட மாட்டா! அதாவது உதடுகள் கூட ஒன்றுடன் ஒன்று பற்று வைக்க மாட்டா! சொல்லிப் பாருங்கள்!