இறைவனை அழைக்கும் வழி!

தெருவிலே சுப்பிரமணி என்று ஒருவர் போகின்றார் என்று வைத்துக் கொள்வோம்! சுப்பிமணி என்று கூப்பிடுகிறோம். அவர் திரும்பிப் பார்க்கவில்லை. ஓய்! சுப்பிரமணி என்று குரலை உயர்த்துகிறோம்! அதற்கும் பயன் இல்லை என்கிற போது கையைத் தட்டி சுப்பிரமணி என்று அழைக்கின்றோம். உடனே சுப்பிரமணி திரும்பிப் பார்க்கிறார். நாம் அழைத்த சுப்பிரமணி மட்டும் திரும்பிப் பார்க்வில்லை! தெருவிலே போகின்ற அனைவருமே கைதட்டியவுடன் திரும்பிப் பார்க்கிறார்கள்! அது போல கையினால் தட்டித் தாளம் போட்டு இறைவனைப் பாடும் போது இறைவன் மட்டுமல்ல வேதங்கள் திரும்பிப் பார்க்கின்றன! நவக் கிரகங்கள் திரும்பிப் பார்க்கின்றன! விநாயகர் திரும்பிப் பார்க்கிறார். வேலவன் பார்க்கிறான்! தேவி பார்க்கின்றாள்! நாராயணர் பார்க்கின்றார்! தேவர்கள் பார்க்கின்றார்கள்! அதனால் தான் எம் முன்னோர்கள் இசையோடு தாளம் போட்டு இறைவனைப் பாடினார்கள்!

– தவத்திரு ஹரிதாஸ் சுவாமிகள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.